செய்திகள் மலேசியா
சீன தொடக்கப்பள்ளிகளை நோக்கி படையெடுக்கும் மலாய் மாணவ மாணவிகள்
கோலாலம்பூர்:
நாடு முழுவதும் உள்ள சீன தாய்மொழி தொடக்கப் பள்ளிகளில் (SJKC) சுமார் 41,133 மலாய் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் தெரிவித்துள்ளார். இது, நாடு முழுவதும் உள்ள SJKC-களில் சேர்ந்துள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் 9.01% ஆகும் என்றும், இது மலாய் மாணவர் சேர்க்கையில் தொடர்ச்சியான உயர்வுப் போக்கைப் பிரதிபலிக்கிறது என்றும் ஃபத்லினா கூறினார்.
2023-ஆம் ஆண்டில் 35,129 மலாய் மாணவர்கள் (6.99%) சேர்ந்திருந்தனர், அதைத் தொடர்ந்து 2024-ஆம் ஆண்டில் 39,373 பேரும் 2025-ஆம் ஆண்டில் 40,035 மாணவர்களும் சேர்ந்துள்ளனர் என்று அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தமிழ் தாய்மொழி தொடக்கப் பள்ளிகளில் (SJKTs) மலாய் மாணவர் சேர்க்கை படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், 2022-ல் 227 ஆக இருந்த இந்த எண்ணிக்கை, 2023-ல் 241 ஆகவும், 2024-ல் 288 ஆகவும், 2025-ல் 295 ஆகவும் உயர்ந்துள்ளதாக ஃபத்லினா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2026, 10:34 pm
ஹங் துவா எல்ஆர்டி ரயில் நிலைய தண்டவாளத்தில் விழுந்த பயணி பாதுகாப்பாக மீட்கப்பட்டார்
July 1, 2026, 10:31 pm
