நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வேட்புமனுக்களுக்குப் பிறகு புதிய திட்டங்கள், கொள்கைகள் குறித்த அறிவிப்புகளுக்கு இடமில்லை: பிரதமர்

கோலாலம்பூர்:

ஒரு தேர்தலுக்கான வேட்புமனுத் தேதிக்குப் பிறகு புதிய திட்டங்கள் அல்லது கொள்கைகள் குறித்த எந்தவொரு அறிவிப்பும் முற்றிலும் அனுமதிக்கப்படாது.

இது 1954 ஆம் ஆண்டின் தேர்தல் குற்றங்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டது என்று டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

மத்திய, மாநில அல்லது உள்ளாட்சி அமைப்புகளில்  உள்ள அரசாங்க இயந்திரங்களை தேர்தல் பிரச்சார நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதற்கும் இந்தத் தீர்ப்பு கடுமையான தடையை உள்ளடக்கியுள்ளது.

இருப்பினும், சம்பந்தப்பட்ட காலத்திற்கு முன்பு அங்கீகரிக்கப்பட்ட, ஏற்கனவே உள்ள திட்டங்களைச் செயல்படுத்துவதிலோ அல்லது தொடர்வதிலோ எந்தப் பிரச்சினையும் இல்லை.

அது விதிமுறைகளின்படி அனுமதிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

நகர, மாநில அல்லது மத்திய அரசாங்க மட்டங்களில் தேர்தல் பிரச்சாரக் காலத்தில் புதிய திட்டங்களை அறிவிக்க அரசாங்க இயந்திரங்களைப் பயன்படுத்த முடியாது என்று அவர் கூறினார்.

ஜொகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களுக்கு முன்னதாக, வேட்புமனுக்களுக்குப் பிறகு நிதி ஒதுக்கீடுகள் அல்லது அரசாங்கத் திட்டங்களை அறிவிப்பதற்கான தடை இன்னும் நடைமுறையில் உள்ளதா என்பது குறித்தும், அத்துடன் இணக்கத்தை உறுதி செய்வதற்கான அமலாக்க வழிமுறை குறித்தும் அராவ் நாடாளுமன்ற உறுப்பினர்  டத்தோஶ்ரீ டாக்டர் ஷாஹிடான் காசிம் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset