நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ராஸ் லஃபானை உலுக்கிய பயங்கர வெடிப்பு: 54 பேர் காயமடைந்துள்ளனர்

டோஹா: 

கத்தாரின் முக்கிய தொழில்துறை, எரிவாயு மையமாக விளங்கும் ராஸ் லஃபான் தொழில்துறை நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட வெடிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தில் குறைந்தது 54 பேர் காயமடைந்துள்ளதுடன், மேலும் 18 பேரை இதுவரை கண்டறிய முடியவில்லை என கத்தார் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகாரப்பூர்வ தகவலின்படி, பார்சான் எரிவாயு ஆலையில் மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த வேளையில் இந்த வெடிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்திற்கான துல்லியமான காரணம் குறித்து விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உலகின் முக்கிய இயற்கை எரிவாயு ஏற்றுமதி மையங்களில் ஒன்றாக விளங்கும் ராஸ் லஃபான் தொழில்துறை நகரம், கத்தாரின் எரிசக்தி துறையின் இதயமாகக் கருதப்படுகிறது. முன்னதாக பிராந்திய மோதல்களின் போது தாக்குதலுக்கு இலக்கான இந்தப் பகுதி, மீண்டும் ஒரு முறை பாதுகாப்பு, தொழில்துறை செயல்பாடுகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

மீட்புப் பணியாளர்கள், அவசரகால குழுக்கள் சம்பவ இடத்தில் தொடர்ந்து தேடுதல், மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், காணாமல் போன 18 பேரின் நிலை குறித்து குடும்பத்தினரும் பொதுமக்களும் ஆழ்ந்த கவலையில் உள்ளனர்.

இந்த வெடிப்பு, கத்தாரின் முக்கிய எரிசக்தி மையத்தில் ஏற்பட்டுள்ளதால், அதன் தாக்கம் பிராந்திய, உலகளாவிய எரிவாயு சந்தைகளிலும் எதிரொலிக்கக்கூடும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset