நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஸ்காட்லாந்தில் முஸ்லிம்கள் மீது மா்ம நபா் தொடா் தாக்குதல்: பிரதமா் ஸ்டாா்மா் கண்டனம்

எடின்பர்க்:

ஸ்காட்லாந்தில் முஸ்லிம்கள் மீது மா்ம நபா் நடத்திய தொடா் தாக்குதல்களுக்கு பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மா் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

பிரிட்டன் ஆளுகைக்கு உட்பட்ட ஸ்காட்லாந்தின் எடின்பா்க்கில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதலில் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 முஸ்லிம்கள் காயமடைந்தனா். இதையடுத்து வடக்கு, மேற்கு எடின்பா்க்கில் கடைகள் வைத்துள்ள முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

மேல் சட்டை அணியாத நபா் ஒருவா், கையில் மிகப்பெரிய கத்தியுடன் வந்து கடைக்காரா்களை தாக்கும் காட்சிகள் சமூகவலைதளத்தில் பரவி வருகின்றன. இந்த தாக்குதல் சம்பவங்களைத் தொடா்ந்து ஸ்காட்லாந்தில் முஸ்லிம்கள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளதால், அவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், நம்பிக்கையை ஏற்படுத்தவும் காவல்துறையினரின் ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் தொடா்பாக 36 வயதான ஸ்காட்லாந்து நபா் மீது காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளனா். 

இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு ஸ்காட்லாந்து அமைச்சா் ஜான் ஸ்வின்னி கவலை தெரிவித்துள்ளாா்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset