நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கடந்தாண்டு ஜொகூர் 13,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் எச்ஆர்டி கோர்ப்பில் இணைந்துள்ளன: டத்தோஸ்ரீ ரமணன்

ஜொகூர்பாரு:

கடந்த ஆண்டு மட்டும் ஜொகூரில் மொத்தம் 13,425 நிறுவனங்கள் எச்ஆர்டி கோர்ப் சுற்றுச்சூழல் அமைப்பின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதன் மூலம், மாநிலத்தில் உள்ள 479,905 தொழிலாளர்களுக்கு நேரடிப் பயிற்சிப் பலன்கள் வழங்கப்பட்டுள்ளன.

தொழில்துறையின் இந்த உயர் அர்ப்பணிப்பின் காரணமாக, 208.21 மில்லியன் ரிங்கிட் லெவி வரி வசூல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில் 183.96 மில்லியன் ரிங்கிட் தொழிலாளர் பயிற்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக முதலாளிகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் கூறினார்.

உள்ளூர் தொழிலாளர்களின் போட்டித்திறனை வலுப்படுத்தும் நோக்கில், ஜொகூரில் 232,072 பேருக்கு வெற்றிகரமாகப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மனிதவள அமைச்சின் 191.5 மில்லியன் ரிங்கிட் நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், என்னைப் பொறுத்தவரை, உண்மையான வெற்றி என்பது செலவழிக்கப்பட்ட பணத்தின் அளவு அல்ல.

மாறாக ஜொகூர் மக்கள் பெற்ற நீண்டகாலப் பலன்களே ஆகும்.

மனிதவள அமைச்சு தனது இலாகாக்கள் மூலம், பகுதிநேரப் பணியாளர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்தவும், அவர்களின் தொழில் எதிர்காலத்தை வலுப்படுத்தவும் எப்போதும் உறுதியுடன் உதவுகிறது.

ஜொகூர் மாநில அளவிலான எச்ஆர்டி கோர்ப்பின் பாக்கெட் டாக் சுற்றுப்பயணத் தொடர் நிகழ்ச்சியில் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset