நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பஞ்சாப் ரயில் தண்டவாள குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர்: டத்தோ குமார்

கோலாலம்பூர்:

பஞ்சாப் ரயில் தண்டவாள குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர்.

புகிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் டத்தோ.எம். குமார் இதனை கூறினார்.

கடந்த ஏப்ரல் 27 அன்று பஞ்சாபின் பாட்டியாலாவில் ரயில் தண்டவாள குண்டுவெடிப்பு  சம்பவம் நடந்தது.

இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும், இந்திய அதிகாரிகளால் தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேக நபர்களை போலிஸ் கைது செய்து நாடு கடத்தியுள்ளது.

அந்த இரண்டு சந்தேக நபர்களும் இன்று இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர்.

அந்த இரண்டு சந்தேக நபர்களைக் கண்டுபிடித்து கைது செய்ய இந்திய அதிகாரிகள் உதவி கோரியதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த ஒத்துழைப்பு, சர்வதேச அளவில் பாதுகாப்பு ஒருங்கிணைப்புகளை வலுப்படுத்தும்.

அதே வேளையில், எல்லை தாண்டிய குற்றங்களை எதிர்த்துப் போராடுவதில் போலிசாரின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.

முன்னதாக ஏப்ரல் மாதம் முதல் கோலாலம்பூரில் பதுங்கியிருந்த சந்தேக நபர், புக்கிட் அமான் போலிசார் கைது செய்யப்பட்டதாக ஜூன் 9 அன்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

- பார்த்திபன் நாகராஜன்





தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset