நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலானில் பெர்சத்து, தேசியக் கூட்டணி அதிகமான தொகுதிகளை கைப்பற்றும்: டத்தோ சரவணக்குமார்

நீலாய்:

நெகிரி செம்பிலானில் பெர்சத்து, தேசியக் கூட்டணி அதிகமான தொகுதிகளை கைப்பற்றும்.

நெகிரி செம்பிலான் பெர்சத்து சயாப் பிரிவின் தலைவர் டத்தோ வீ. சரவணக்குமார் இந்த நம்பிக்கையை தெரிவித்தார்.

நெகிரி செம்பிலான் சட்டமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது.

ஜொகூர் மாநில தேர்தலை தொடர்ந்து நெகிரி செம்பிலான் மாநில தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் பெர்சத்து, பாஸ் கட்சிகளுக்கு இடையிலான அரசியல் நட்பு துண்டிக்கப்பட்டது.

இருந்தாலும் பெர்சத்து கட்சி தொடர்ந்து தேசியக் கூட்டணியில் நீடிக்கும். இரு மாநில தேர்தல்களை எதிர்கொள்ள பெர்சத்து தயார் என்று கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் கூறினார்.

இதன் அடிப்படையில் ஜொகூரை தொடர்ந்து நெகிரி செம்பிலானிலும் பெர்சத்து மிகப் பெரிய வெற்றியை பெறும்.

குறிப்பாக அதிகமான தொகுதிகளை பெர்சத்து கைப்பற்றும் என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset