செய்திகள் மலேசியா
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநில தேர்தல்களில் தேசிய முன்னணி தராசு சின்னத்தை பயன்படுத்தும்: ஜம்ரி
ஜொகூர்பாரு:
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநில தேர்தல்களில் தேசிய முன்னணி தனது தராசு சின்னத்தை பயன்படுத்தும்.
தேசிய முன்னணி தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காடிர் இதனை கூறினார்.
வரவிருக்கும் ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் தராசு சின்னத்தைப் பயன்படுத்திப் போட்டியிடுவதற்கான தனது நிலைப்பாட்டை தேசிய முன்னணி இறுதி செய்துள்ளது.
ஜொகூர் அம்னோ தொடர்பு அலுவலகத்தில் நடைபெற்ற அரசியல் கூட்டணியின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஐந்து முக்கிய முடிவுகளில் இதுவும் ஒன்றாகும்.
ஜொகூர், நெகிரி செம்பிலான் தேர்தல்களே தேசிய முன்னணியின் முக்கியக் கவனமாக உள்ளது.
வெற்றியை உறுதி செய்வதற்காகக் கட்சியின் முழு கேந்திரமும் விரிவாகத் திரட்டப்பட்டுள்ளது.
தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்தின் பதவிக்காலம் முடியும் வரை அதற்கு ஆதரவளிப்பதில் தேசிய முன்னணி உறுதியாக இருக்கும் என்றும் உயர்கல்வி அமைச்சருமான அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
நாட்டின் அரசியல் நிலைத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையைத் தக்கவைக்கவும், மக்களின் நலனுக்காகப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் தொடர்ச்சியை உறுதி செய்யவும் இந்த உறுதிப்பாடு முக்கியமானது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 14, 2026, 11:41 pm
கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் தலைவராக விகேகே ராஜசேகரன் வெற்றி
June 14, 2026, 3:24 pm
நெகிரி செம்பிலானில் உள்ள துரோக சக்திகளை பிரதமர் ஆதரித்தார்
June 14, 2026, 3:22 pm
43 ஆண்டுகளுக்குப் பிறகு பண்டார் சிகாமாட் தமிழ்ப்பள்ளிக்கு புதிய விடிவுகாலம் பிறந்தது: ஜலேஹா
June 14, 2026, 3:21 pm
தேசிய உணர்வை வலுப்படுத்த அரசியல் முதிர்ச்சி அவசியம்: பிரதமர்
June 14, 2026, 3:20 pm
