நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செராஸ் ஸ்ரீ பூலாவ் பினாங் மகா மாரியம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகம்: விமரிசையாக நடைபெற்றது

கோலாலம்பூர்:

செராஸ் ஸ்ரீ பூலாவ் பினாங் மகா மாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா மிகுந்த பக்தி, ஆன்மிக சிறப்புடன் விமரிசையாக நடைபெற்றது.

இந்து ஆகம முறைகளின்படி ஆலயத் தலைவர் டேவிட் தலைமையில் சிறப்பு யாகங்கள், பூஜைகள் காலை 7.00 மணி முதல் தொடங்கின.

தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க, யாகசாலையில் நடைபெற்ற புனித கிரியைகள் பக்தர்களை ஆன்மிக உணர்வில் ஆழ்த்தின.

சரியாக காலை 8.40 மணியளவில், பக்தர்கள்  புடைசூழ்ந்த நிலையில், கும்பங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு ஆலய கோபுரங்கள் மற்றும் விமானங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

அந்த தருணம் பக்தர்களிடையே பெரும் ஆனந்தத்தையும் பக்தி பரவசத்தையும் ஏற்படுத்தியது.

இந்த மகா கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக கடந்த மூன்று நாட்களாக கலச பூஜைகள், எண்ணெய் வைத்தல், யாகங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக நிகழ்வுகள் முறையாக நடைபெற்றன.

இவ்வனைத்திற்கும் பின் இன்று ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நிறைவு பெற்றது.

இந்நிகழ்ச்சியில் மஇகா மத்திய செயலவை உறுப்பினர்களான அண்ட்ரூ டேவிட், தினாலன், கூட்டரசுப் பிரதேச துணைத் தலைவர் பாலாகுமரன், கோலாலம்பூர் முருகன் கோவில் தலைவர் டத்தோ சுரேஷ் குமார் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள், வட்டாரத் தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

மகா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து அன்னதானம், பிரசாத விநியோகம் நடைபெற்றது.

இந்நிகழ்வு அந்த பகுதியின் இந்து சமுதாய ஒற்றுமையையும் ஆன்மிக எழுச்சியையும் வெளிப்படுத்தியதாக குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset