நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

ரூப்பியாவின் சரிவால் மலேசியாவில் பணிபுரியும் இந்தோனேசியர்களுக்குப் ‘பண மழை’

கோலாலம்பூர்: 

இந்தோனேசிய ரூப்பியாவின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ள நிலையில், மலேசியாவில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான இந்தோனேசிய தொழிலாளர்களுக்கு அது எதிர்பாராத நிதி நன்மையை வழங்கியுள்ளது.

ரிங்கிட்டில் சம்பளம் பெறும் தொழிலாளர்கள், தாய்நாட்டிற்கு அனுப்பும் பணத்தின் மதிப்பு தற்போது கணிசமாக உயர்ந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். முன்பைவிட குடும்பத்தினர் அதிக தொகையைப் பெறுவதுடன், சேமிப்பையும் அதிகரிக்க முடிவதாக அவர்கள் கூறுகின்றனர்.

மூன்று ஆண்டுகளாக மலேசியாவில் பணிபுரியும் மைமுனா அஸ்மடின், ரிங்கிட்டின் வலிமையால் சொந்த ஊருக்கு அனுப்பும் ஒவ்வொரு பணப் பரிமாற்றமும் தற்போது கூடுதல் மதிப்பைப் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

அதேவேளை, மற்றொரு தொழிலாளரான அர்டியான்சா, 1,000 ரிங்கிட் அனுப்பினால் 4.4 மில்லியன் ரூப்பியாவுக்கும் அதிகமாக கிடைக்கிறது எனக் குறிப்பிட்டு, தற்போதைய நிலை தொழிலாளர்களுக்குப் பெரிய நிதி ஆதாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.

இதற்கிடையில், ரூப்பியா மதிப்பு தொடர்ந்து சரிவடைந்ததைத் தொடர்ந்து, மலேசியாவில் உழைக்கும் இந்தோனேசியர்கள் தங்களது எதிர்காலத்திற்காக கூடுதல் சேமிப்புகளை உருவாக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளதாகவும், பலர் இதை ‘பொற்கால வாய்ப்பு’ எனக் கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset