செய்திகள் வணிகம்
ரூப்பியாவின் சரிவால் மலேசியாவில் பணிபுரியும் இந்தோனேசியர்களுக்குப் ‘பண மழை’
கோலாலம்பூர்:
இந்தோனேசிய ரூப்பியாவின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ள நிலையில், மலேசியாவில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான இந்தோனேசிய தொழிலாளர்களுக்கு அது எதிர்பாராத நிதி நன்மையை வழங்கியுள்ளது.
ரிங்கிட்டில் சம்பளம் பெறும் தொழிலாளர்கள், தாய்நாட்டிற்கு அனுப்பும் பணத்தின் மதிப்பு தற்போது கணிசமாக உயர்ந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். முன்பைவிட குடும்பத்தினர் அதிக தொகையைப் பெறுவதுடன், சேமிப்பையும் அதிகரிக்க முடிவதாக அவர்கள் கூறுகின்றனர்.
மூன்று ஆண்டுகளாக மலேசியாவில் பணிபுரியும் மைமுனா அஸ்மடின், ரிங்கிட்டின் வலிமையால் சொந்த ஊருக்கு அனுப்பும் ஒவ்வொரு பணப் பரிமாற்றமும் தற்போது கூடுதல் மதிப்பைப் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
அதேவேளை, மற்றொரு தொழிலாளரான அர்டியான்சா, 1,000 ரிங்கிட் அனுப்பினால் 4.4 மில்லியன் ரூப்பியாவுக்கும் அதிகமாக கிடைக்கிறது எனக் குறிப்பிட்டு, தற்போதைய நிலை தொழிலாளர்களுக்குப் பெரிய நிதி ஆதாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.
இதற்கிடையில், ரூப்பியா மதிப்பு தொடர்ந்து சரிவடைந்ததைத் தொடர்ந்து, மலேசியாவில் உழைக்கும் இந்தோனேசியர்கள் தங்களது எதிர்காலத்திற்காக கூடுதல் சேமிப்புகளை உருவாக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளதாகவும், பலர் இதை ‘பொற்கால வாய்ப்பு’ எனக் கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 5:34 pm
5 பேர் அமரக்கூடிய காரை அறிமுகம் செய்கிறது Ferrari
May 26, 2026, 9:56 am
அமெரிக்கா-ஈரான் அமைதிப் பேச்சால் ரிங்கிட் உயர்வு: சரிவைச் சந்தித்த இந்திய ரூபாய்
May 20, 2026, 11:40 am
நச்சுணவால் நெஸ்ட்லெ, டெனன் பால்மாவு மீட்பு: நிறுவனங்கள்மீது விசாரணை
May 19, 2026, 8:48 pm
Starbucks Korea வெளியிட்ட புதிய குவளை: பறிபோனது CEOவின் பதவி
May 15, 2026, 12:22 pm
BSN வங்கி குலுக்கலில் 10 லட்சம் ரிங்கிட்டை ஆசிரியர் முனீஸ்வரன் மணியம் வென்றார்
May 14, 2026, 4:26 pm
