நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

முகநூலில் அதிகரித்துவரும் சட்டவிரோத வனவிலங்கு விற்பனை: சமூக ஆர்வலர்கள் கண்டனம்

கலிபோர்னியா:

உலகில் அருகிவரும் வனவிலங்குகளின் சட்டவிரோத விற்பனை
Facebook பக்கத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது தடுக்கப்பட வேண்டும் என்று சமூக அரவாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Meta தனது தளங்களில் இதுபோன்ற விற்பனைகளைத் தடுக்கத் தவறுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அருகிவரும் வனவிலங்குகள் வெளிப்படையாக Facebook பக்கங்களில் விளம்பரம் செய்யப்படுகின்றன.

உலகில் அதிகம் கடத்தப்படும் பாலூட்டிகளில் ஒன்றான பாங்கோலின்களும் (Pangolin) அதில் அடங்கும்.

ஏப்ரல் 2024ஆம் ஆண்டு முதல் மார்ச் 2026ஆம் ஆண்டு வரை 2,60,000க்கும் மேற்பட்ட வனவிலங்குப் பொருள்கள் சமூக ஊடகங்களில் விற்கப்படுவது தெரியவந்தது.

அந்தப் பொருள்களுக்கு 20,000க்கும் மேற்பட்ட விளம்பரங்கள் வெளியிடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

தீவிர நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம் தொடந்து அதிகரிக்கும் என்று ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset