செய்திகள் வணிகம்
2030-க்குள் இந்தியா - நியூசிலாந்து வர்த்தகத்தை ரூ.35,000 கோடியாக உயர்த்த இலக்கு
ஆக்லாந்து:
இந்தியாவும் நியூசிலாந்தும் முக்கிய துறைகளில் நீண்ட காலத்துக்கு ஒன்றாக இணைந்து செயல்படுவது என்றும், 2030-க்குள் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்க, அதாவது ரூ.35,000 கோடியாக உயர்த்துவது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று (ஜூலை 10) நியூசிலாந்து சென்றடைந்தார்.
பிரதமர் நரேந்திர மோடியும் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனும் தங்கள் தூதுக்குழுவினருடன் இணைந்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். இதில், பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த பேச்சுவார்த்தையின்போது பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, இந்தியாவும் நியூசிலாந்தும் முக்கிய துறைகளில் நீண்ட காலத்துக்கு ஒன்றாக இணைந்து செயல்படுவது என்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், 2030-க்குள் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்குவது, அதாவது ரூ.35,000 கோடியாக உயர்த்துவது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக ஐந்து ஆண்டு கால திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2026, 3:03 pm
பிரபலமான கன்வேயர் சுஷி உணவகமான சுஷிரோ, KLCC கிளையை மூட சுகாதார அதிகாரிகள் உத்தரவு
June 30, 2026, 11:39 am
முகநூலில் அதிகரித்துவரும் சட்டவிரோத வனவிலங்கு விற்பனை: சமூக ஆர்வலர்கள் கண்டனம்
June 27, 2026, 6:29 pm
ஒரு கிலோ 1 ரிங்கிட்: 3,000 கிலோ துரியன் பழங்கள் வெறும் ஐந்து நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன
June 26, 2026, 12:47 pm
2ஆவது ஆண்டாக மலேசிய - டிலி வர்த்தக மாநாடு, கண்காட்சி முதலீட்டுக்கான சிறந்த வாய்ப்பு: டைலான்
June 25, 2026, 10:10 am
தொடர்ச்சியாக 4 ஆண்டுகள் பணவீக்கம் சரிந்துள்ளது: அர்மிசான்
June 24, 2026, 7:10 am
WhatsApp செயலியின் புதிய தலைவர் இந்தியர்
June 22, 2026, 12:21 pm
