செய்திகள் இந்தியா
6 நாட்கள் 'இறப்பு மண்டலத்தில்' போராட்டம்: எவரெஸ்டில் காணாமல் போன வழிகாட்டி உயிருடன் மீண்ட அதிசயம்
காட்மாண்டு:
எவரெஸ்ட் மலையின் ஆபத்தான ‘டெத் சோன்’ பகுதியில் ஆறு நாட்களாகக் காணாமல் போன நேபாள மலையேற்ற வழிகாட்டி ஹிலாரி தாவா ஷெர்பா, அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
உலகின் உயரமான சிகரத்தை வெற்றிகரமாக அடைந்த பின்னர், கடுமையான வானிலை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவிய சூழலில் அவர் மாயமானதாகக் கூறப்பட்டது. உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகக் கருதப்பட்ட நிலையில், எவரெஸ்ட் அடிப்படை முகாமை நோக்கி தனியாக ஊர்ந்து வந்தபோது அவர் கண்டுபிடிக்கப்பட்டார்.
மீட்புக் குழுவினர் உடனடியாக ஹெலிகாப்டரை அனுப்பி, அவரை காட்மாண்டுவிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பினர்.
முன்னாள் ராயல் மரைன் வீரரான பிரிட்டிஷ் மலையேறி கிறிஸ் த்ரால், மே 29-ஆம் தேதி ஷெர்பாவுடன் சிகரத்தை அடைந்ததாகவும், பின்னர் மோசமான வானிலை காரணமாக அவர்கள் பிரிந்ததாகவும் தெரிவித்தார்.
"எல்லாம் நன்றாக இருக்கிறது, நீங்கள் தொடர்ந்து இறங்குங்கள்" என்று ஷெர்பா கூறியதே அவருடன் நடந்த கடைசி உரையாடல் எனவும் அவர் நினைவுகூர்ந்தார்.
இந்த ஆண்டின் எவரெஸ்ட் மலையேற்ற பருவத்தில் 1,000-க்கும் மேற்பட்டோர் சிகரத்தை வென்றுள்ள நிலையில், குறைந்தது ஐந்து உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. அந்தச் சூழலில், ஆறு நாட்கள் உயிருடன் தாக்குப்பிடித்து திரும்பிய ஷெர்பாவின் கதை, மலையேற்ற உலகில் ஒரு அதிசய மீட்பாக பார்க்கப்படுகிறது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 4, 2026, 10:07 pm
பிஹார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்
June 4, 2026, 12:55 pm
பாரம்பரியத்தை உடைத்து சவுதிக்கான இந்தியத் தூதராக முஸ்லிம் அல்லாதவரை நியமித்தது ஒன்றிய அரசு
June 3, 2026, 3:50 pm
டெல்லி உணவகத்தில் தீ விபத்து; 10 பேர் உயிரிழப்பு
May 30, 2026, 12:57 pm
2026 ஆம் ஆண்டில் 11 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவிலான பருவமழையை இந்தியா எதிர்பார்க்கிறது
May 29, 2026, 9:52 am
இந்தியாவின் பிரபல உருது கவிஞர் பஷீர் பத்ர் 91 வயதில் காலமானார்
May 29, 2026, 8:34 am
கர்நாடாகாவின் முதல்வர் ஆகிறார் டி.கே.சிவக்குமார்
May 28, 2026, 8:23 pm
கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா
May 27, 2026, 2:11 pm
