நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பிரதமர் மோடியும் கல்வி அமைச்சரும் பதவி விலகக்கோரி கரப்பான் ஜனதா கட்சியினர் நாடாளுமன்றத்தை நோக்கி மாபெரும் பேரணி

புது டெல்லி:

இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு நாடாளுமன்றத்தை நோக்கி மாபெரும் பேரணி நடத்த கூடி வருகின்றார்கள் 

காவல்துறையின் எச்சரிக்கையை மீறி அவர்கள் நாடாளுமன்றம் நோக்கிப் பேரணியாகச் செல்லவிருக்கின்றனர்.

இந்திய பிரதமர் மோடியும் இந்தியக் கல்வியமைச்சரும் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி CJP எனும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் பெரிய அளவில் போராட்டம் நடத்துகின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்தது. ஆனால் போராட்டக்காரர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை.

NEET மருத்துவத் தேர்வில் நடந்த முறைகேடுகளுக்குப் பிறகு CJPஇன் ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

புதுடில்லியில் திரண்டிருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள், கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானும் (Dharmendra Pradhan) பிரதமர் நரேந்திர மோடியும் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் முழங்கி வருகின்றனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset