நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் தானாகவே கலைக்கப்படுமா?

சிரம்பான்:

வரும் ஜூன் 10ஆம் தேதிக்குள் மாநில சட்டமன்றக் கூட்டத் தொடர் நடத்தப்படாவிட்டால், நெகிரி செம்பிலான் அரசு அரசியலமைப்பு நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடலாம்.

நெகிரி செம்பிலான் அரசியலமைப்பின் கீழ், 2025 டிசம்பர் 11ஆம் தேதி கடைசியாக கூட்டத்தொடர் நடைபெற்றது.

அதன் பிறகு ஆறு மாதங்களுக்குள் சட்டமன்ற கூட்டத்தொடர் நடத்தப்பட வேண்டும் என்று தேசிய முன்னணி முன்னாள் தகவல் தொடர்பு துணை இயக்குநர் டத்தோ எரிக் சீ டோ கூறினார்.

மாநில அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஆறு மாதங்களுக்குள் சட்டமன்றம் கூடத் தவறினால், தானாகவே கலைக்கப்படும் பிரச்சினை எழக்கூடும்.

சட்ட விதியின் கீழ், ஒரு அமர்வின் கடைசி அமர்வுக்கும் அடுத்த அமர்வின் முதல் அமர்வு நடைபெறும் தேதிக்கும் இடையில் ஆறு மாதங்கள் கடந்து செல்ல அனுமதிக்க முடியாது.

இதன் பொருள் என்னவென்றால், 2026 ஜூன் 10ஆம் தேதிக்குள் உண்மையான நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடத்தப்படாவிட்டால், நெகிரி செம்பிலான் மிகவும் கடுமையான அரசியலமைப்புச் சிக்கலை எதிர்கொள்ளும் என்று அவர்  கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset