நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ண போட்டியில் குரோஷியா அணிக்கு தலைமையேற்கும் பொறுப்பை மோட்ரிக் தக்கவைக்கிறார்

ஷக்ராப்:

உலகக் கிண்ண போட்டியில்  குரோஷியா அணிக்கு தலைமையேற்கும் பொறுப்பை லூகா மோட்ரிக் தக்கவைக்கிறார்.

2026 உலகக் கிண்ண போட்டிக்காக பயிற்சியாளர் ஸ்லாட்கோ டாலிக் தனது 26 பேர் கொண்ட அணியில் எந்த மாற்றமும் செய்யாததால், குரோஷியா கேப்டன் லூகா மோட்ரிச் தனது கடைசி உலகக் கிண்ண போட்டியில் விளையாட உள்ளார்.

இங்கிலாந்து, கானா, பனாமாவுக்கு எதிரான எல் பிரிவு போட்டிகளுக்கு முன்னதாக, டாலிக் மே 18 அன்று அறிவிக்கப்பட்ட தற்காலிக அணியைத் தக்கவைத்துக்கொண்டு, ஏழு மாற்று வீரர்களை நீக்கியுள்ளார்.

40 வயதான மோட்ரிச், ரஷ்யாவில் நடந்த 2018 உலகக் கிண்ண போட்டியில் தனது நாடு இரண்டாம் இடத்தைப் பிடிக்கவும், 2022இல் கத்தாரில் மூன்றாம் இடத்தைப் பிடிக்கவும் உதவிய பிறகு மீண்டும் அவர் கேப்டனாக குரோஷியாவை வழிநடத்துவார்.

இந்த முறை குரோஷியாவின் அணி, குறிப்பாகப் பாதுகாப்புப் பிரிவில், அனுபவமும் இளமையும் இணைந்து உள்ளதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset