நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பிய சாம்பியன் லீக்: பிஎஸ்ஜி சாம்பியன்

புடாபெஸ்ட்:

ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்து போட்டியில் பிஎஸ்ஜி அணியினர் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

புஸ்காஸ் அரேனாவில் நடைபெற்ற ஆட்டத்தில் பிஎஸ்ஜி அணியினர் அர்செனல் அணியை சந்தித்து விளையாடினர்.

இரு முன்னணி அணிகள் மோதியதால் ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவுற்றது.


இதை தொடர்ந்து வெற்றியாளரை நிர்ணயிக்க ஆட்டம் பெனால்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.

பெனால்டியில் சிறந்து விளங்கிய பிஎஸ்ஜி அணியினர் 4-3 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து பிஎஸ்ஜி அணியினர் ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ணத்தை தட்டிச் சென்றனர்.

குறிப்பாக பிஎஸ்ஜி அணி சாம்பியன் லீக் பட்டத்தை மீண்டும் தக்கவைத்துக் கொண்டது.

அதே வேளையில் தங்களின் 140 ஆண்டு கால வரலாற்றில் முதன் முறையாக சாம்பியன் லீக் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்ற அர்செனலின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset