நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பிஎஸ்ஜி வெற்றி கொண்டாட்டத்தில் ரசிகர்கள் வன்முறை: ஒருவர் மரணம்

பாரிஸ்:

சாம்பியன் லீக் இறுதிப் போட்டியில் அர்செனல் அணியை வீழ்த்தி பிஎஸ்ஜி அணி பட்டத்தை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 

இதைத் தொடர்ந்து, பிரான்சில் நடந்த கால்பந்து ரசிகர்களின் கொண்டாட்டத்தில் வன்முறை வெடித்தது.

பிரான்ஸ் முழுவதும் ஆங்காங்கே கால்பந்து ரசிகர்களுக்கும் போலிசாருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. 

இதுதொடர்பாக, 400-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைநகர் பாரிஸில் பேருந்து, ரயில், போக்குவரத்துச் சேவைகள் முடங்கிப் போயின. 

நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்க ஆயிரக்கணக்கான போலிசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நகரின் மையப் பகுதியில் வன்முறையைக் கட்டுப்படுத்த போலிசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.

இந்த சம்பவத்தில் ஒருவர் மரணமடைந்ததாக போலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset