செய்திகள் இந்தியா
ஈரானில் தடுத்து வைக்கப்பட்ட 10 இந்திய மாலுமிகள் விடுவிக்கப்பட்டனர்
மும்பை:
கடந்த ஆண்டு ஜூலையில், ஜாஸ்க் துறைமுகத்திற்கு அருகில், பயணம் செய்த எண்ணெய் கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானில் தடுத்து வைக்கப்பட்ட 10 இந்திய மாலுமிகள், இந்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியான இராஜதந்திர முயற்சிகளின் விளைவாக விடுவிக்கப்பட்டனர்.
இந்திய கப்பல் போக்குவரத்து இயக்குநரகம், செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், MV ஹார்பர் ஃபீனிக்ஸ் கப்பலில் இருந்த அந்த மாலுமிகள், அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து முன்னர் தடுத்து வைக்கப்பட்டு ஈரானில் சிறையில் அடைக்கப்பட்டதாகத் தெரிவித்தது.
"அனைத்து மாலுமிகளும் இப்போது விடுவிக்கப்பட்டு, பாதுகாப்பான நிலையில் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளனர்" என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட கப்பல் குழுவினரை விரைவில் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அது கூறியுள்ளது.
இந்தியாவும், ஈரானும் நீண்டகால இராஜதந்திர, எரிசக்தி ஒத்துழைப்பு உறவுகளைக் கொண்டுள்ளன. இருப்பினும், அதே நேரத்தில், புது டெல்லி அமெரிக்காவுடனும், இஸ்ரேலுடனும் நெருங்கிய உறவுகளைப் பேணி வருகிறது.
வளைகுடாப் பகுதியில், சட்டவிரோதமாக எரிபொருளைக் கொண்டு செல்வதாகக் கூறப்படும் கப்பல்களைத் தடுத்து நிறுத்துவதாக ஈரான் அதிகாரிகள் அடிக்கடி அறிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து, உலகின் எண்ணெய், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு சரக்குகளில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டு செல்லும் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் கட்டுப்பாடுகளை ஈரான் இறுக்கியுள்ளது.
உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் வாங்கும் நாடான இந்தியா, பொதுவாக தனது கச்சா எண்ணெய் விநியோகத்தில் கிட்டத்தட்ட பாதியை ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பெறுகிறது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 25, 2026, 10:35 am
இந்தியாவை வாட்டி வதைக்கும் வெப்பம்: தெலங்கானா வெயிலில் 16 பேர் பலி
May 22, 2026, 11:06 pm
டில்லி விமான நிலையத்தில் முழு அவசரநிலையை அறிவித்த ஏர் இந்தியா
May 21, 2026, 5:38 pm
மோடியை பாம்பாட்டியாக காட்டிய நார்வே நாளிதழின் கேலிச்சித்திரம்
May 20, 2026, 11:48 am
மோடியிடம் கேள்வி கேட்ட நார்வே செய்தியாளர் இன்ஸ்டா, முகநூல் பக்கங்கள் முடக்கம்
May 19, 2026, 8:19 pm
