நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தலைநகரில் உள்ள ஒரு முக்கிய கட்டிடத்தில் போலி வெடிகுண்டு மிரட்டல்

கோலாலம்பூர்:

தலைநகரில் உள்ள ஒரு முக்கிய கட்டிடத்தில் நேற்று இரவு ஒரு போலி வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக போலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

பிரிக்பீல்ட்ஸ் போலிஸ் நிலையத் தலைவர் ஹூ சாங் ஹூக் இதனை கூறினார்.

இரவு 9.09 மணிக்கு அந்தக் கட்டிடத்தின் பாதுகாப்பு ஊழியர் ஒருவரிடமிருந்து இந்த அழைப்பு வந்தது.

கட்டிடத்தின் வடக்கு கோபுரத்தின் 23ஆவது மாடியில் ஒருவர் வெடிகுண்டு வைத்திருப்பதாக வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு அனுப்பப்பட்ட ஒரு மின்னஞ்சல் தனக்கு வந்ததாக அந்தப் பாதுகாப்பு ஊழியர் எங்களிடம் தெரிவித்தார்.

அது ஒரு பொய்யான அச்சுறுத்தல் என்பதைக் கண்டறிவதற்கு முன்பு, தேடுதல் நடத்துவதற்காக வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு, மோப்ப நாய்ப் பிரிவு, தடயவியல் பிரிவு ஆகியவை உடனடியாக அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த வழக்கு, 1998ஆம் ஆண்டின் தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையச் சட்டத்தின் பிரிவு 233, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 507 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset