நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செந்துலில் நடந்த சண்டைக்கு கடன், தனிப்பட்ட பிரச்சினைகள் காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது

கோலாலம்பூர்:

20,000 ரிங்கிட் கடன் பிரச்சினை குறித்த தகராறு, தனிப்பட்ட மோதல்களே கடந்த புதன்கிழமை மதியம் இங்குள்ள செந்துல் ராயாவைச் சுற்றி ஒரு கும்பல் நபர்களை உள்ளடக்கிய வைரலான சண்டை சம்பவத்திற்குக் காரணம் என்று நம்பப்படுகிறது.

செந்துல் மாவட்ட துணை போலிஸ் சூப்பிரண்டெண்டன்ட் ஜாஸ்னி ஜோல்பா, இதுவரை, இரண்டு ஆண்கள் உட்பட இரண்டு உள்ளூர் பெண்களை உள்ளடக்கிய நான்கு கைதுகள் செய்யப்பட்டுள்ளன.

"சண்டைக்குக் காரணம், தனிப்பட்ட பிரச்சினைகள், கடன் காரணமாகும். அனைத்து சந்தேக நபர்களும் நேற்று முதல் இரண்டு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

"மேலும் மூன்று சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், அவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. 

"அனைத்து சந்தேக நபர்களும் ஒருவரையொருவர் அறிந்தவர்கள். அவர்கள் நண்பர்கள், தனிப்பட்ட உறவுகளைக் கொண்டுள்ளனர்" என்று இங்குள்ள செந்துல் மாவட்ட போலிஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் கூறினார்.

இதற்கு முன்னர், சாலையின் நடுவில் ஒரு கும்பல் சண்டையிடுவதைக் காட்டும், 1 நிமிடம் 29 விநாடிகள் நீடிக்கும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset