நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிங்கப்பூரில் சிக்கிய 26ஆவது மலேசியர்: ஆள்மாறாட்ட மோசடியில் மலேசியப் பெண் கைது

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிபோலத் தம்மைக் காட்டிக்கொள்ளும் ஆள்மாறாட்ட மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தில் 34 வயது மலேசியப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து இரண்டு தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த செவ்வாய்க்கிழமை (மே 19) சிங்கப்பூரைவிட்டு வெளியேற முயன்றபோது பிடிபட்ட அவரிடமிருந்து காவல்துறையினர் இரண்டு தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்தனர்.

அவரையும் சேர்த்து, கடந்த மார்ச் மாதம் முதல் சிங்கப்பூரில் மோசடிக் கும்பல்களுக்குத் துணைபோன சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள 26ஆவது மலேசியர் என்று காவல்துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

- ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset