நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

22 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்லும் தருவாயில் அர்செனல் அணி

லண்டன்:

கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்லும் தருவாயில் அர்செனல் அணி உள்ளது.

எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் பெர்ன்லி அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டதை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் பெர்ன்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அர்செனல் அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 37ஆவது நிமிடத்தில் காய் ஹாவர்ட்ஸ் அடித்தார்.

இந்த வெற்றியை தொடர்ந்து அர்செனல் அணியினர் 82 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர்.

மேலும் இங்கிலாந்து பிரிமியர் லீக் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை ஒரு வெற்றி தொலைவில் அர்செனல் அணியினர் உள்ளனர்.

அதுவும் 22 ஆண்டுகளுக்குப் பிறகு அக்கிண்ணத்தை அர்செனல் அணியினர் வெல்லவுள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset