நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி சாம்பியன்

லண்டன்:

இங்கிலாந்து எப்ஏ கிண்ண கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

வெம்பிளி அரங்கில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் செல்சி அணியை சந்தித்து விளையாடினர்.

இரு முன்னணி அணிகள் மோதியதால் ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கியது.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் சிட்டி அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் செல்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மென்செஸ்டர் சிட்டி அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 72ஆவது நிமிடத்தில் அந்தோனியோ செமன்யோ அடித்தார்.

இந்த வெற்றியை தொடர்ந்து மென்செஸ்டர் சிட்டி அணியின் இந்த எப்ஏ கிண்ணத்தை தட்டிச் சென்றனர்.

மேலும் மென்செஸ்டர் சிட்டி அணியினர் 8ஆவது முறையாக இக்கிண்ணத்தை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset