செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி சாம்பியன்
லண்டன்:
இங்கிலாந்து எப்ஏ கிண்ண கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
வெம்பிளி அரங்கில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் செல்சி அணியை சந்தித்து விளையாடினர்.
இரு முன்னணி அணிகள் மோதியதால் ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கியது.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் சிட்டி அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் செல்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மென்செஸ்டர் சிட்டி அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 72ஆவது நிமிடத்தில் அந்தோனியோ செமன்யோ அடித்தார்.
இந்த வெற்றியை தொடர்ந்து மென்செஸ்டர் சிட்டி அணியின் இந்த எப்ஏ கிண்ணத்தை தட்டிச் சென்றனர்.
மேலும் மென்செஸ்டர் சிட்டி அணியினர் 8ஆவது முறையாக இக்கிண்ணத்தை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2026, 4:24 pm
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: அபாரமாக ஆடி துனிசியாவை சுவீடன் வென்றது
June 15, 2026, 12:58 pm
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: 5-1 என்ற கணக்கில் துனிசியாவை வீழ்த்திய ஸ்வீடன்
June 15, 2026, 12:20 pm
ஏலத்திற்கு வரும் உலகக் கிண்ணப் போட்டி நினைவுப் பொருள்கள்
June 15, 2026, 9:28 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: நெதர்லாந்து - ஜப்பான் சமநிலை
June 15, 2026, 9:25 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: ஜெர்மனி கோல் மழை
June 14, 2026, 7:19 pm
உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி: ஆஸ்திரேலியாவிடம் தோற்றது துருக்கியே
June 14, 2026, 11:52 am
