நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் மட்டுமல்ல, மற்ற அனைத்து மாநிலத் தொகுதிகளிலும் போட்டியிட நம்பிக்கை கூட்டணி தயாராக உள்ளது: அன்வார்

ஜொகூர்பாரு:

ஜொகூர் மட்டுமல்ல, மற்ற அனைத்து மாநிலத் தொகுதிகளிலும் போட்டியிட நம்பிக்கை கூட்டணி தயாராக உள்ளது.

பிரதமரும் நம்பிக்கை கூட்டணி தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

அடுத்த தேர்தலுக்கு முன்னதாக தேசிய முன்னணி மாபெரும் தேர்தல் சவாலைத் தொடர்ந்தால்,

நெகிரி செம்பிலான், சிலாங்கூர், பினாங்கு, பகாங், ஜொகூர் உள்ளிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட நம்பிக்கை கூட்டணி தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

நம்பிக்கை கூட்டணி தனது அரசியல் வியூகம் குறித்து பல மாதங்களாக விவாதித்து வருகிறது.

மேலும் மற்ற கட்சிகள் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்தால், உறுதியான பதிலடி கொடுக்கும்.

மற்ற கட்சிகள் மோதல் பாதையைத் தேர்ந்தெடுத்தால், அதே வழியில் பதிலளிப்பதைத் தவிர நம்பிக்கை கூட்டணிக்கு வேறு வழியில்லை என்று டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset