செய்திகள் மலேசியா
ஜோ லோ, டிரம்ப்பிடம் மன்னிப்புக் கோரியதாகத் தகவல் வெளியாகியுள்ளது
கோலாலம்பூர்:
தலைமறைவான தொழிலதிபர் ஜோ லோ, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் மன்னிப்புக் கோரி மனு தாக்கல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
செவ்வாயன்று வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் வெளியான ஒரு அறிக்கையை மேற்கோள் காட்டி,
இந்த விவகாரம் குறித்து அறிந்த ஒரு வட்டாரத்தின்படி, இந்த மனு கடந்த சில வாரங்களுக்குள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டால், அமெரிக்காவில் ஜோ லோ மீதுள்ள அனைத்து குற்றவியல் குற்றச்சாட்டுகளும் கைவிடப்படும்.
மேலும், அமெரிக்க நீதித்துறை இணையதளத்தில் ஜோ லோ என்ற பெயரில் ஒரு கோரிக்கை நிலுவையில் உள்ளதாக அந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த விண்ணப்பத்தின் விவரங்கள், தண்டனைக் காலம் முடிந்த பிறகான மன்னிப்பு என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் இந்த அறிக்கையை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை.
இருப்பினும், ஜோ லோவின் மன்னிப்பு விண்ணப்பம் தற்போது வெள்ளை மாளிகையின் கண்காணிப்பில் இல்லை அல்லது அதற்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் வால் ஸ்ட்ரீட் ஜர்னலிடம் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 25, 2026, 9:59 am
பெட்ரோனாஸ் FSO செப்பாட் தளத்தில் விபத்து: 3 பேர் பலி: பெட்ரோனாஸ் அறிவிப்பு
May 24, 2026, 10:51 pm
கல்வி நிறுவனங்களில் பாலியல் முறைகேடு வழக்குகள் அதிகரிப்பு; கவலையளிக்கிறது: டத்தோ சிவக்குமார்
May 24, 2026, 12:55 pm
