நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள பல இடங்களில் கனமழையால் திடீர் வெள்ளம்

கோலாலம்பூர்:

கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள பல இடங்களில்  கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நாட்டில் மதியம் முதல் கனமழை பெய்து வருகிறது.

இதனால் கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

கோலாலம்பூர், சிலாங்கூர் கூட்டாட்சிப் பிரதேசங்களில் போக்குவரத்து நெரிசலும், சாலைப் பயனாளர்களுக்கு இடையூறும் ஏற்பட்டது.

கனமழையைத் தொடர்ந்து வெள்ளத்தில் மூழ்கிய அம்பாங் சாலைகளின் நிலையை, பயனர் @tharsh.h, 'Threads' செயலி மூலம் பகிர்ந்துள்ளார்.

மற்றொரு பயனரான @imalmast என்பவரும், மேருவில் இதேபோன்று வெள்ள சூழ்நிலையைப் பதிவிட்டிருந்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset