நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஈரான் போர் மேலும் 2 அல்லது 3 வாரங்கள் நீடிக்கும்: டிரம்ப்

இஸ்தான்புல்: 

ஈரானுடனான போர், மேலும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு நீடிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியதாக அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

"நேரம் எங்களுக்கு ஒரு தடையல்ல" என்று வானொலி தொகுப்பாளர் ஹக் ஹெவிட்டுடன் நேற்று நடைபெற்ற ஒரு தொலைபேசி நேர்காணலில் டிரம்ப் கூறியுள்ளார்.
இருப்பினும், ஐக்கிய

ஐக்கிய அரபு aமீரகத்தை நோக்கி ஈரான் நடத்திய தாக்குதல் குறித்த அறிக்கைகளைத் தொடர்ந்து, ஈரானுடனான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளதா என்பதை டிரம்ப் உறுதிப்படுத்த மறுத்துவிட்டார்.

கடந்த திங்கட்கிழமை நடந்த சம்பவம் மோதல் மீண்டும் உச்சத்தை எட்டுவதைக் குறிக்கிறதா என்று கேட்டதற்கு, "எப்படியிருந்தாலும், நாங்கள் வெல்வோம்" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

"இராணுவக் கண்ணோட்டத்தில், நாங்கள் ஏற்கனவே அதில் வெற்றி பெற்றுவிட்டோம். நான் பலமுறை சொன்னதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள், மற்றவர்களும் சொன்னார்கள்: அவர்களிடம் 159 கப்பல்கள் இருந்தன, ஹக். இப்போது, அவர்களிடம் எதுவும் இல்லை. அனைத்தும் கடலின் அடிப்பகுதியில் உள்ளன" என்றார் அவர்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset