நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஆஸ்திரியாவில் பரபரப்பு: பிஞ்சு குழந்தைகளின் உணவில் விஷம் கலந்த நபர் அதிரடியாக கைது

வியன்னா:

ஆஸ்திரியாவில் உள்ள பிரபல 'ஹிப்' (HiPP) நிறுவனத்தின் குழந்தை உணவுப் பொருள்களில் விஷம் கலந்து மிரட்டல் விடுத்த வழக்கில், சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரை அந் நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

39 வயதான அந்த நபரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க ஐசன்பிராக் (Eisenstadt) நகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர், பாதிக்கப்பட்ட அந்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

அவர் குழந்தை உணவுப் பொருள்களில் எலி விஷத்தைக் கலந்துவிட்டு, நிறுவனத்தை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

ஆதாரங்களை மறைக்கக்கூடும் அல்லது தப்பியோடக்கூடும் என்ற அடிப்படையில் அவருக்குப் பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்த நச்சு கலந்த உணவுப் பொருள்கள் ஆஸ்திரியா மட்டுமின்றி, செக் குடியரசு, ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன. 

இது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடுமையான உடல் உபாதைகளை ஏற்படுத்த முயன்றது, மிரட்டி பணம் பறித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் அந்த நபர் மறுத்து வருகிறார். இது குறித்த மேல் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset