நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதை அடுத்து அலெக்ஸ் பெர்குசன் அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்

லண்டன்:

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட முன்னாள் மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி சர் அலெக்ஸ் பெர்குசன், மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் செல்லப்பட்டார்.

மென்செஸ்டர் யுனைடெட்  லிவர்பூல் அணிகளுக்கு இடையேயான பிரிமியர் லீக்  போட்டியை காண ஓல்டு டிராப்போர்ட் அரங்கிற்கு வந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

தற்போது 84 வயதான பெர்குசன், உடல்நலக்குறைவு ஏற்படுவதற்கு முன்பு இந்த இரு பரம எதிரிகளுக்கும் இடையேயான மோதலைக் காண அரங்கிற்கு வந்திருந்தார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசோதனைகளுக்காக அவர் வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.

அப்போது பெர்குசன் சுயநினைவுடன் இருந்ததாக ஸ்கை ஸ்போர்ட்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுவரை, முன்னாள் நிர்வாகியின் தற்போதைய உடல்நிலை குறித்து யுனைடெட் எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset