செய்திகள் வணிகம்
தொழில்நுட்ப மையமாக உருவெடுக்கும் மலேசியா: ஏர்டிரங்க் நிறுவனத்தின் RM27 பில்லியன் ரிங்கிட் திட்டம்
கோலாலம்பூர்:
ஆசிய பசிபிக், மத்திய கிழக்கு பிராந்தியத்தின் முன்னணித் தரவு மைய (Data Centre) நிறுவனமான 'ஏர்டிரங்க்' (AirTrunk), மலேசியாவில் கூடுதலாக 12 பில்லியன் வெள்ளியை முதலீடு செய்ய முன்வந்துள்ளது.
இதன் மூலம், மலேசியாவில் அந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த முதலீட்டு மதிப்பு RM27 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
ஏர்டிரங்க் நிறுவனத்தின் நிறுவனர், தலைமைச் செயல் அதிகாரி ராபின் குடா தலைமையிலான குழுவினர், நேற்று பிரதமரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இச்சந்திப்பின் போது, ஜொகூர் மாநிலத்தில் அமையவுள்ள தரவு மையங்களின் கட்டுமானப் பணிகள் குறித்தும், உள்ளூர் நிறுவனங்கள் இத்துறையின் மதிப்புச் சங்கிலியில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த முதலீட்டு முடிவானது, மலேசியாவை ஒரு போட்டித்தன்மை மிக்க, உயர் திறன் கொண்ட பிராந்திய டிஜிட்டல் மையமாக மாற்றும் அரசாங்கத்தின் முயற்சிக்குக் கிடைத்துள்ள பெரும் அங்கீகாரமாகும்.
உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மலேசியா ஒரு சிறந்த மூலோபாயக் கூட்டாளியாகத் திகழ்வதை இது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாகப் பிரதமர் தனது எக்ஸ் (X) தளப் பதிவில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
மலேசிய அரசாங்கம் தரவு மையங்களின் மேம்பாடு, செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கக் கொள்கைகளைச் சீரமைத்து வரும் வேளையில், இத்தகைய பெரும் முதலீடுகள் நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் உள்ளூர் நிறுவனங்களுக்கும் அதிக வேலைவாய்ப்புகளும் தொழில்நுட்பப் பகிர்வும் கிடைக்கும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
August 23, 2026, 11:18 am
மறுபயனீட்டுக்காக சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு அனுப்பப்படும் துணிகள்
August 17, 2026, 3:15 pm
நாசிகண்டார் மாமா கேஃப்பே தனது 7ஆவது உணவகக் கிளையை வெற்றிகரமாக திறந்தது
August 13, 2026, 4:53 pm
சிக்னேச்சர் இன்டர்நேஷனல் - கெச்சாரா இணைந்து அமைத்த புதிய உணவு விநியோகம், திறன் மேம்பாட்டு மையம்
August 12, 2026, 9:27 pm
"மீண்டும் தலைமைப் பொறுப்புக்கு என்னை நியமிக்க வேண்டாம்": டாடா சன்ஸ் தலைவர் அறிவிப்பு
July 16, 2026, 5:43 pm
ஜப்பானில் சைபர் தாக்குதல்: நிச்சிரேய் நிறுவனம் பாதிக்கப்பட்டது
July 11, 2026, 7:04 pm
