நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

டுரியானின் அறுவடைக்காலம் தொடங்குகிறது: விலை ஏறலாம் என விற்பனையாளர்கள் கவலை

கோல திரெங்கானு:

டுரியான் பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பருவம் தொடங்கிவிட்டது.

வரும் வாரங்களில் மழை பெய்தால் பழத்தின் தரம் பாதிக்கப்படலாம் என்று டுரியான் விற்பவர்கள் கவலைப்படுகின்றனர்.

மலேசியா முழுவதும் டுரியான் பழங்கள் காய்க்கத் தொடங்கிவிட்டன.

இந்த மாத இறுதியில் உச்ச அறுவடை காலம்.

Penang's Durian Season Arrives Early, Fruits Creamier And Tastier Than Usual

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அறுவடை குறைவாக இருக்கும் என டுரியான் விற்பவர்கள் கணிக்கின்றனர். அறுவடை குறைந்தால் விலை உயர வாய்ப்புள்ளது.

வரும் வாரங்களின் வானிலை மாற்றங்கள் டுரியான் பழங்களின் தரத்தையும் விநியோகத்தையும் பாதிக்கலாம் என்ற கவலை விற்பனையாளர்களிடையே உள்ளது.

டுரியான் விற்கப்படும் முறையில் நிறைய மாற்றம் வந்துள்ளது.

வாடிக்கையாளர்களை ஈர்க்க நேரலை விற்பனை முறை உதவுகிறது. நேரலை விற்பனையில் பழங்கள் வெட்டிக் காட்டப்படுகின்றன.

இதனால் வருமானம் 50 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது என்கிறார் விற்பனையாளர் ஒருவர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset