செய்திகள் வணிகம்
டுரியானின் அறுவடைக்காலம் தொடங்குகிறது: விலை ஏறலாம் என விற்பனையாளர்கள் கவலை
கோல திரெங்கானு:
டுரியான் பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பருவம் தொடங்கிவிட்டது.
வரும் வாரங்களில் மழை பெய்தால் பழத்தின் தரம் பாதிக்கப்படலாம் என்று டுரியான் விற்பவர்கள் கவலைப்படுகின்றனர்.
மலேசியா முழுவதும் டுரியான் பழங்கள் காய்க்கத் தொடங்கிவிட்டன.
இந்த மாத இறுதியில் உச்ச அறுவடை காலம்.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அறுவடை குறைவாக இருக்கும் என டுரியான் விற்பவர்கள் கணிக்கின்றனர். அறுவடை குறைந்தால் விலை உயர வாய்ப்புள்ளது.
வரும் வாரங்களின் வானிலை மாற்றங்கள் டுரியான் பழங்களின் தரத்தையும் விநியோகத்தையும் பாதிக்கலாம் என்ற கவலை விற்பனையாளர்களிடையே உள்ளது.
டுரியான் விற்கப்படும் முறையில் நிறைய மாற்றம் வந்துள்ளது.
வாடிக்கையாளர்களை ஈர்க்க நேரலை விற்பனை முறை உதவுகிறது. நேரலை விற்பனையில் பழங்கள் வெட்டிக் காட்டப்படுகின்றன.
இதனால் வருமானம் 50 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது என்கிறார் விற்பனையாளர் ஒருவர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 23, 2026, 11:18 am
மறுபயனீட்டுக்காக சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு அனுப்பப்படும் துணிகள்
August 17, 2026, 3:15 pm
நாசிகண்டார் மாமா கேஃப்பே தனது 7ஆவது உணவகக் கிளையை வெற்றிகரமாக திறந்தது
August 13, 2026, 4:53 pm
சிக்னேச்சர் இன்டர்நேஷனல் - கெச்சாரா இணைந்து அமைத்த புதிய உணவு விநியோகம், திறன் மேம்பாட்டு மையம்
August 12, 2026, 9:27 pm
"மீண்டும் தலைமைப் பொறுப்புக்கு என்னை நியமிக்க வேண்டாம்": டாடா சன்ஸ் தலைவர் அறிவிப்பு
July 16, 2026, 5:43 pm
ஜப்பானில் சைபர் தாக்குதல்: நிச்சிரேய் நிறுவனம் பாதிக்கப்பட்டது
July 11, 2026, 7:04 pm
