செய்திகள் வணிகம்
டுரியானின் அறுவடைக்காலம் தொடங்குகிறது: விலை ஏறலாம் என விற்பனையாளர்கள் கவலை
கோல திரெங்கானு:
டுரியான் பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பருவம் தொடங்கிவிட்டது.
வரும் வாரங்களில் மழை பெய்தால் பழத்தின் தரம் பாதிக்கப்படலாம் என்று டுரியான் விற்பவர்கள் கவலைப்படுகின்றனர்.
மலேசியா முழுவதும் டுரியான் பழங்கள் காய்க்கத் தொடங்கிவிட்டன.
இந்த மாத இறுதியில் உச்ச அறுவடை காலம்.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அறுவடை குறைவாக இருக்கும் என டுரியான் விற்பவர்கள் கணிக்கின்றனர். அறுவடை குறைந்தால் விலை உயர வாய்ப்புள்ளது.
வரும் வாரங்களின் வானிலை மாற்றங்கள் டுரியான் பழங்களின் தரத்தையும் விநியோகத்தையும் பாதிக்கலாம் என்ற கவலை விற்பனையாளர்களிடையே உள்ளது.
டுரியான் விற்கப்படும் முறையில் நிறைய மாற்றம் வந்துள்ளது.
வாடிக்கையாளர்களை ஈர்க்க நேரலை விற்பனை முறை உதவுகிறது. நேரலை விற்பனையில் பழங்கள் வெட்டிக் காட்டப்படுகின்றன.
இதனால் வருமானம் 50 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது என்கிறார் விற்பனையாளர் ஒருவர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2026, 2:22 pm
போர் நிறுத்தம் எதிரொலி: சரிந்தது எண்ணெய் விலை
June 11, 2026, 6:06 pm
மத்திய கிழக்கு பதற்றம் தீவிரம்: பணவீக்க அதிர்ச்சியால் தள்ளாடும் டாலர்
June 11, 2026, 6:01 pm
லக்சாவிலிருந்து கலை உலகம் வரை: மூன்று தலைமுறைப் பெண்களின் வெற்றிப் பயணம்
June 10, 2026, 10:39 am
வாடிக்கையாளர்களைக் கவர உணவகங்களை அதன் செயலியில் விளம்பரப்படுத்த கிராப் நிறுவனம் புதிய திட்டம்
June 8, 2026, 11:15 am
அமெரிக்க டாலரின் எழுச்சியால் சரிவு கண்ட மலேசிய ரிங்கிட்
June 6, 2026, 2:16 pm
ரூப்பியாவின் சரிவால் மலேசியாவில் பணிபுரியும் இந்தோனேசியர்களுக்குப் ‘பண மழை’
May 26, 2026, 5:34 pm
5 பேர் அமரக்கூடிய காரை அறிமுகம் செய்கிறது Ferrari
May 26, 2026, 9:56 am
