நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜப்பானுக்கு அனுப்பப்பட்ட DARA, AMOI, KELAR  ஆகிய 3 யானைகள் உடனடியாக மலேசியாவுக்கு கொண்டு வர வேண்டும்: டத்தோ டாக்டர் கலைவாணர்

புத்ராஜெயா:

ஜப்பானுக்கு அனுப்பப்பட்டDARA, AMOI, KELAR  ஆகிய 3 யானைகள் உடனடியாக மலேசியாவுக்கு கொண்டு வர வேண்டும்.

நம்பிக்கை இயக்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் கலைவாணர் இதனை வலியுறுத்தினார்.

தைப்பிங்கில் உள்ள யானைகள் பராமரிப்பு மையத்தில் இந்த மூன்று யானைகளும் இருந்தன.

ஆனால் திடீரென இம்மூன்று யானைகளும் ஜப்பானுக்கு அனுப்பப்பட்டன.

அங்கு அந்த யானைகளுக்கு பல அநீதிகள் நடந்து வருகிறது.

குறிப்பாக அந்த யானைகளின் தந்தங்கள் வெட்டப்பட்டுள்ளன. ஆண் யானையின் காலில் கடுமையாக காயங்கள் ஏற்பட்டுள்ளது.

அதே வேளையில் ஜப்பான் பருவ நிலை மாற்றம் யானைகளுக்கு பொருத்தமானதாக இல்லை.

ஜப்பானில் உள்ள அரசு சாரா இயக்கங்களின் உதவியால் இதற்கான ஆதாரங்களை நாங்கள் பெற்றுள்ளோம்.

இதன் அடிப்படையில் தான் இயற்கை வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சிடம் ஒரு மகஜரை நாங்கள் வழங்கினோம்.

இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் யானைகள் ஜப்பானுக்கு அனுப்பப்பட்ட விவகாரம் அமைச்சருக்கே தெரியவில்லை.

ஆக அமைச்சர் இவ்விவகாரத்திற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

குறிப்பாக ஜப்பானுக்கு அனுப்பப்பட்ட DARA, AMOI, KELAR  ஆகிய 3 யானைகள் உடனடியாக மலேசியாவுக்கு கொண்டு வர வேண்டும்.

இதுவே எங்களின் கோரிக்கை என்று டத்தோ கலைவாணர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset