நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கப்பாளா பாத்தாஸ் போலிஸ் நிலையத்தில் உள்ள ஓர் அறை தீயில் முற்றிலுமாக அழிந்தது

அலோர்ஸ்டார்:

கப்பாளா பாத்தாஸ் போலிஸ் நிலையத்தில் காவல் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஓர் அறை முற்றிலுமாக அழிந்தது.

அலோர்ஸ்டார் தீயணைப்பு,  மீட்புத் துறை தலைவர் இஸ்மாயில் முகமது ஜைன் இதனை கூறினார்.

அதிகாலை 1.56 மணிக்குத் தமக்கு அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, ஒரு தீயணைப்பு வாகனம்,  இரண்டு விரைவு மீட்பு மோட்டார் சைக்கிள் பிரிவுகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தார்.

போலிஸ் துறையின் சாலைத் தடுப்பு உபகரணங்களைச் சேமித்து வைக்கப் பயன்படுத்தப்பட்ட ஓர் அறையில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது.

இந்தத் தீ விபத்தில், அந்த அறை சுமார் 80 சதவீதம் சேதமடைந்துள்ளது என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset