நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட்ட டீசல் மலேசியாவிற்குச் சொந்தமானது அல்ல: ஃபஹ்மி

புத்ராஜெயா:

ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட்ட மொத்தம் 20 கோடி லிட்டர் டீசல் மலேசியாவிற்குச் சொந்தமானது அல்ல.

தகவல் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் இதனை வலியுறுத்தினார்.

மடானி அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளராகவும் இருக்கும் அவர், 20 கோடி லிட்டர் டீசல் ஏற்றுமதியில் புரூணை, மலேசியா உள்ளிட்ட பல நாடுகள் சம்பந்தப்பட்டிருப்பதாக ஒரு ஆஸ்திரேலிய செய்தி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தேசியப் பொருளாதார நடவடிக்கைக் குழுவின் கீழ் உள்ள தகவல் தொடர்பு கட்டளை மையம் மற்றும் பல தொடர்புடைய தரப்பினர் இணைந்து நடத்திய ஆய்வில், அந்த டீசல் மலேசியாவிற்குச் சொந்தமானது அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலைமை, இதற்கு முன்னர் பிலிப்பைன்ஸுக்கு அனுப்பப்பட்ட டீசல் ஏற்றுமதியின்போது இருந்ததைப் போன்றதே ஆகும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset