நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தியாவிற்கு செல்லும் மலேசியர்கள் கட்டாயம் வருகை அட்டைகளுக்கு இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்

கோலாலம்பூர்:

இந்தியாவிற்குப் பயணம் செய்யும் மலேசியர்கள், புறப்படுவதற்கு குறைந்தது 72 மணி நேரத்திற்கு முன்பாக இணையத்தில் வருகை அட்டை அல்லது மின்-வருகை அட்டைக்கு விண்ணப்பித்து சமர்ப்பிக்க வேண்டும்.

புதுடில்லியில் உள்ள மலேசிய தூதரகத்தின் சமூக ஊடகக் கணக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு இந்தியக் குடிமக்கள் அட்டை வைத்திருப்பவர்கள் உட்பட அனைத்து மலேசியக் குடிமக்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.

மின்னணு வருகை அட்டைக்கான விண்ணப்பத்தை indianvisaonline.gov.in/earrival/ என்ற இந்திய அரசாங்க இணையதளம் மூலம் சமர்ப்பிக்கலாம்.

பயணிகள், மின்னணு வருகை அட்டை உறுதிப்படுத்தலின் நகலை டிஜிட்டல் அல்லது அச்சிடப்பட்ட வடிவத்தில் தங்களுடன் வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும், செல்லுபடியாகும் விசா, பயண ஆவணங்களுக்குக் கூடுதலாக இந்தத் தேவை உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

புறப்படுவதற்கு முன்பு சமீபத்திய பயண விதிமுறைகளைச் சரிபார்க்கவும், சமீபத்திய வழிகாட்டுதல்களுக்காக சம்பந்தப்பட்ட இந்திய அதிகாரிகளை அணுகவும் மலேசியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset