நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

230 மில்லியன் ரிங்கிட்  கையாடல் வழக்கில் ஜகாத் நிறுவனங்கள் சம்பந்தப்படவில்லை: டான்ஶ்ரீ அஸாம் பாக்கி

கோலாலம்பூர்:

அரசு சாரா அமைப்பில் உள்ள ஒருவர் பெரிய அளவிலான ஜகாத் கையாடல் கண்டறியப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அஸாம் பாகி கூறினார்.

தேவையுள்ளவர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய சில நிதி வசூல்களிலிருந்து பெறப்பட்ட கமிஷன்கள் உட்பட, சம்பந்தப்பட்ட அந்த அரசு சாரா அமைப்பு பல்வேறு தரப்பினரிடமிருந்து நன்கொடைகளைப் பெற்றதாக அவர் கூறினார்.

இருப்பினும், இந்த நிதிகள் அவற்றின் நோக்கத்தை அடையவில்லை. குறிப்பாக திருக்குர்ஆன் வரையறுக்கும் எட்டு பிரிவினருக்கு சென்றடையவில்லை.  

மாறாக அவர்களில் சிலர் பொறுப்பற்ற முறையில் ஆடம்பர சொத்துக்களை வாங்குவது உட்பட, தனிப்பட்ட ஆதாயத்திற்காக இந்த நிதிகளைத் தவறாகப் பயன்படுத்தி உள்ளனர் என்று அவர் வெளியிட்ட ஓர்  அறிக்கையில் தெரிவித்தார்.

  230 மில்லியன் ரிங்கிட் ஜகாத் பணம் கையாடல் வழக்கு குறித்த விசாரணையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தீவிரமாக உள்ளது என்று டான்ஶ்ரீ அஸாம் பாக்கி கூறினார். 

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset