செய்திகள் உலகம்
எரிபொருள் தட்டுப்பாடு: வங்காளதேசத்தில் தொலைபேசியைப் பயன்படுத்த முடியாத நிலை உண்டாகலாம்
டாக்கா:
வங்காளதேசத்தில் பரவலாகத் தொலைத் தொடர்பு முடங்கிப் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேற்கு ஆசியாவில் நீடிக்கும் போரால் வங்காளதேசத்தில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
டீசல் இல்லாவிட்டால் தகவல் நிலையங்களையும், அவற்றின் பாதுகாப்பு அமைப்புகளையும் இயக்க முடியாமல் போகலாம் என்று வங்கதேச தொலைத் தொடர்பு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
தொடர்பு முடங்கினால் தொலைபேசியில் அழைத்துப் பேசவோ தகவல் பரிமாறவோ முடியாது, இணையத் தொடர்பும் பாதிக்கப்படலாம் என்று அவை கூறின.
வங்காளதேசம 95 விழுக்காட்டு எரிபொருளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறது.
மக்கள் பெட்ரோல் வாங்குவதற்கு 12 மணி நேரம் அல்லது அதற்கும் கூடுதலாக பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 3:43 pm
எல்லை தாண்டி வந்த போர் மேகங்கள்: அவசரமாக வெளியேற்றப்பட்ட எல்லையோர கிராம மக்கள்
April 21, 2026, 3:24 pm
ஜெர்மனியின் குருத்வாரா புனிதத்தலத்தில் வெடித்த போர்: 11 பேர் படுகாயம்
April 21, 2026, 12:12 pm
காலத்தைக் கடந்த தலைமைக்கு நூற்றாண்டு மரியாதை: மீண்டும் உயிர்த்த ராணியின் நினைவுகள்
April 21, 2026, 10:48 am
சீனாவை அச்சுறுத்தும் புதிய வைரஸ்: சிறுவர்களைக் குறிவைக்கும் 'பாரா இன்ஃபுளுயன்சா'
April 21, 2026, 9:49 am
ஜப்பானின் ஆயுதப் புரட்சி: உலகச் சந்தையில் நுழையும் போர்க்கப்பல்களும் ஏவுகணைகளும்
April 20, 2026, 4:07 pm
