நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

முழு வீச்சில் தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவத்திற்கு நெட்டன்யாஹு ஆணை: லெபனானில் உள்ள அணைத்து கட்டடங்களையும் சாலைகளையும் தகர்க்க உத்தரவு

டெல் அவிவ்: 

இஸ்ரேல் - லெபனான் போர் இன்னும் முடிவடையவில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு (Benjamin Netanyahu) தெரிவித்துள்ளார். 

அமைதி முயற்சிகள் தொடரும் வேளையில் அவர் அவ்வாறு கூறி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சண்டைநிறுத்தம் நடப்பில் இருந்தாலும், லெபனானை முழு வீச்சில் தாக்க இஸ்ரேலிய ராணுவத்திற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. 

லெபனானில் உள்ள அணைத்து கட்டடங்களையும் சாலைகளையும் இடித்து தரைமட்டமாக்க உத்தரவிட்டதாக இஸ்ரேலியத் தற்காப்பு அமைச்சர் இஸ்ரேல் கெட்ஸ் (Israel Katz) கூறினார்.

தொடர்ந்து இஸ்ரேல் அத்துமீறி வருவதை பலரும் கண்டித்துள்ளனர். இதுகுறித்து அமேரிக்கா எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

​​​​​- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset