நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஹார்முஸில் ஈரான் கப்பலை கைப்பற்றிய ‘யுஎஸ் மரைன்ஸ்’: பதிலடிக்கு தயாராகும் தெஹ்ரான்

தெஹ்ரான்:

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில், "ஈரானியக் கொடி ஏந்திய 'தூஸ்கா' (TOUSKA) என்னும் சுமார் 900 அடி நீளமும், ஒரு விமானம் தாங்கிப் போர்க்கப்பலுக்கு நிகரான எடையும் கொண்ட சரக்குக் கப்பல் எங்களது கடற்படை முற்றுகையைத் தாண்டிச் செல்லமுயன்றது.

ஆனால் அது அவர்களுக்குச் சாதகமாக அமையவில்லை. ஓமன் வளைகுடாவில் அமெரிக்கக் கடற்படையின் ஏவுகணை அழிப்புக் கப்பலான 'யுஎஸ்எஸ் ஸ்ப்ரூயன்ஸ்' (USS SPRUANCE), தூஸ்கா கப்பலை வழிமறித்து, நிறுத்தி உள்ளது. 

ஹார்முஸ் நீரிணையை முற்றுகையிட்டுள்ள அமெரிக்காவின் மிக முக்கியப் படைப்பிரிவான் யுஎஸ் மரைன்ஸ், அந்த வழியாகச் சென்ற ஈரான் கொடி பறந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தி அதனை கைப்பற்றி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்துள்ள ஈரான், இதற்கு தக்க பதிலடி கொடுக்கப் போவதாக சூளுரைத்துள்ளது.

​​​​​- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset