நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாவாவ் சாலையில் பயங்கரம்: பிக் அப் வேன் தடம் புரண்டதில் இருவர் உயிரிழந்தனர்

தாவாவ்: 

நேற்று ஜாலான் அப்பாஸ், பத்து 11-இல் வளைவில் சென்று கொண்டிருந்த போது, பிக் அப் வேன் தடம் புரண்டதில், இரண்டு ஒப்பந்ததாரர்கள் உயிரிழந்தனர்.

மாலை 5.15 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், சம்பந்தப்பட்ட வாகனத்தில் பயணித்தவர்களில் 41 வயதுடைய பாதிக்கப்பட்டவர் ஒருவருக்கு வலது தோள்பட்டை முறிந்துள்ளது.

தாவாவ் மாவட்ட போலிஸ் தலைவர் உதவி ஆணையாளர் ஜாஸ்மின் ஹுசைன், மாலை 5.25 மணிக்கு அந்த விபத்து குறித்த தகவலைத் தாம் பெற்றதாகத் தெரிவித்தார்.

ஆரம்பக் கட்ட விசாரணையில், ஒரு இசுஸு வகை பிக் அப் வேன், ஒரு புரோட்டான் சாகா ஆகியவை இந்த விபத்தில் சம்பந்தப்பட்டதாகக் கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.

"விபத்தின் போது, 35 வயதுடைய ஒரு பெண்ணால் ஓட்டப்பட்ட புரோட்டான் சாகா, பத்து 10-லிருந்து இங்குள்ள கம்போங் மம்பாலுவா நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

"அதே சமயம், 44 வயதுடைய ஒரு ஆணும், அவரது சக ஊழியரும் மின் கம்பி பழுதுபார்க்கும் பணிகளை முடித்த பின்னர், கம்போங் இந்திரசபாவிலிருந்து பத்து 4 நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்" என்று அவர் நேற்று இரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சம்பவ இடத்தை வந்தடைந்ததும், பிக் அப் வேனின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததாக நம்பப்படுவதாகவும், அதற்குப் பின்னர் அந்த வாகனம் தடம் புரண்டு, சுமார் 35 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

"சம்பந்தப்பட்ட பிக் அப் வேன், பின்னர் சாலையின் டிவாய்டர் மீது ஏறியது. பின்னர், அது கவிழ்ந்து, ஒரு மின் கம்பத்தில் மோதியது. அந்த மின் கம்பம் விழுந்து, எதிர் திசைப் பாதையில் வந்த புரோட்டான் சாகாவின் முன்பகுதியின் மீது விழுந்தது" என்றார் அவர்.

இரு ஓட்டுநர்களும் காயமடையவில்லை என்றும், காயமடைந்த பிக் அப் வேனின் பயணி மேலதிக சிகிச்சைக்காக தாவாவ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கவனக்குறைவாக, கருத்தில் கொள்ளாமல் வாகனம் ஓட்டியதற்காக, 1987 ஆம் ஆண்டின் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 43(1) கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset