செய்திகள் வணிகம்
600 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துடமைகள்; நாட்டிலேயே மிகப் பெரிய ஏல விழாவை எஹ்சான் குழுமம் நடத்துகிறது: டத்தோ பிவி அப்துல் ஹமித்
கோலாலம்பூர்:
நாட்டிலேயே மிகப் பெரிய ஏல விழாவை எஹ்சான் குழுமம் நடத்துகிறது.
எஹ்சான் வர்த்தக குழுமத்தின் தலைவர் டத்தோ பிவி அப்துல் ஹமித் இதனை கூறினார்.
நாட்டில் முன்னணி சொத்துடமை ஏல நிறுவனமாக எஹ்சான் விளங்கி வருகிறது.
33 ஆண்டுகளாக இத் துறையில் எஹ்சான் ஈடுபட்டு சாதித்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக எஹ்சான் வர்த்தகக் குழுமம் மாபெரும் சொத்துடமை ஏல விழாவை நடத்துகிறது.
கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட சொத்துடமைகள் இவ்விழாவில் ஏலத்திற்கு விடப்படுகிறது.
குறிப்பாக 10,000 ரிங்கிட் முதல் 6 மில்லியன் ரிங்கிட் வரையில் சொத்துடமைகள் இன்று ஏலம் விடப்படுகின்றன.
இந்த சொத்துடமைகளின் மொத்த மதிப்பு 600 மில்லியன் ரிங்கிட்டாகும் என்று அவர் கூறினார்.
வீடுகள், கடைகள் உட்பட சொத்துடமைகள் ஏலத்தில் வாங்குவதால் ஏதும் பிரச்சினை வருமா என்ற சந்தேகம் பலரிடம் இருக்கும்.
குறிப்பாக இந்திய சமுதாயத்திடையே பெரும் அச்சம் நிலவுகிறது.
ஆனால் ஏலத்தில் விடப்படும் சொத்துடமைகள் தரமானதாக இருக்கும். அச்சமடையத் தேவையில்லை.
அதே வேளையில் குறைந்த விலையில் இவ்வீடுகளை மக்கள் வாங்கி கொள்ளலாம்.
தற்போதைய சூழ்நிலையில் வீட்டின் விலை, அது அமைந்துள்ள இடம்தான் முக்கியம்.
ஆகவே மக்கள் தயங்காமல் ஏலத்தில் வரும் சொத்துகளை வாங்கலாம்.
சொத்துகளை ஏலத்தில் வாங்குவதற்கு மக்களுக்கு வழிகாட்ட எஹ்சான் எப்போதும் தயாராக உள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன
தொடர்புடைய செய்திகள்
May 15, 2026, 12:22 pm
BSN வங்கி குலுக்கலில் 10 லட்சம் ரிங்கிட்டை ஆசிரியர் முனீஸ்வரன் மணியம் வென்றார்
May 14, 2026, 4:26 pm
சபாவில் இருந்து ஆப்பிரிக்கா வரை: பனைத் தொழிலில் புதிய பொருளாதாரப் புரட்சி
May 11, 2026, 5:05 pm
தங்கம் வாங்குவதைத் தவிர்க்க சொன்ன மோடியின் கருத்தால் இன்று மும்பை பங்கு சந்தை சரிந்தது
May 7, 2026, 10:52 am
உலக சந்தையை அதிரவைக்கும் மலேசிய நாணயத்தின் மீட்சி
May 2, 2026, 12:24 pm
அடுத்த வார ரிங்கிட் மதிப்பில் சிறிய மாற்றம் எதிர்ப்பார்க்கப்படுகிறது
April 30, 2026, 12:58 pm
