நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா சுத்திகரிக்கப்பட்ட நீரில் 30 சதவீதத்திற்கும் மேல் இழக்கிறது: துணைப் பிரதமர்

கோலாலம்பூர்:

சுத்திகரிக்கப்பட்ட நீரில் 30 சதவீதத்திற்கும் மேல் இழக்கப்படுவதால், மலேசியா நீர் மேலாண்மையில் கடுமையான சவால்களை எதிர்கொள்கிறது.

சில மாநிலங்களில் இந்த இழப்பு விகிதம் 40 சதவீதத்திற்கும் அதிகமாகவும் பதிவாகியுள்ளது.

இந்த நிலைமை செயல்திறன் பிரச்சினை மட்டுமல்ல.

இது ஒரு பெரிய அளவிலான வள இழப்பு என்று துணைப் பிரதமர் டத்தோ அமார் ஃபடில்லா யூசோப் கூறினார்.

நாட்டின் வாழ்வாதாரத்திற்கு நீர் அடித்தளமாக விளங்குகிறது.
ஆனால் அது அதிக கவனம் பெறாத ஒரு சவாலாகவே நீடிக்கிறது.

தற்போதைய நீர் கட்டணக் கட்டமைப்பும் செயல்பாட்டு யதார்த்தங்களுடன் ஒத்திசைவில்லாமல் இருப்பதால், விநியோக அமைப்பின் நிலைத்தன்மையைப் பாதிக்கிறது.

ஒரு அமைப்பு அதன் இயக்கச் செலவுகளைத் தானே ஈடுசெய்ய முடியாவிட்டால், அது ஒரு நிலையான அமைப்பாக இருக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது.

கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற மலேசியா எரிசக்தி, நீர், காலநிலை மாற்ற உச்சநிலை மாநாடு 2026இல் தனது சிறப்புரையை ஆற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.

ஸ்மார்ட் மீட்டர், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களின் பயன்பாடு உதவக்கூடும்.

ஆனால் கடினமான முடிவுகளை எடுப்பதற்கான தைரியம் தேவை.

எரிசக்தி, நீர் மாற்றத்திற்கான செலவுகளை மலேசியாவால் முழுமையாகத் தாங்க முடியாது என்பதால், நிதி ஒரு பெரிய சவாலாக உள்ளது.

பொது நிதிகள் ஒரு முழுமையான வழங்குநராக இல்லாமல், ஒரு நிதி வல்லுநராக இருக்க வேண்டும்.

முதலீட்டாளர்கள் தெளிவு, கொள்கை நிலைத்தன்மை, வலுவான ஒப்பந்தங்களை விரும்புகிறார்கள் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset