நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆண் குழந்தை வீட்டின் வெளியே சோபாவில் கண்டுபிடிக்கப்பட்டது

ஷா ஆலம்: 

நேற்று காலை, கிள்ளான், ரந்தாவ் பஞ்சாங் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வெளியே ஒரு சோபாவில், ஒரு ஆண் குழந்தை சுற்றியணைக்கப்பட்ட நிலையிலும், உயிருடனும் கண்டுபிடிக்கப்பட்டது.

கிள்ளான் உத்தாரா மாவட்ட போலிஸ் தலைவர் உதவி ஆணையாளர் எஸ். விஜயா ராவ், காலை 11 மணியளவில் ஒரு உள்ளூர் ஆணிடமிருந்து, அந்தக் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது குறித்த புகாரைத் தாம் பெற்றதாகத் தெரிவித்தார்.

"அந்தத் தகவலின் பேரில், கிள்ளான் உத்தாரா மாவட்ட போலிஸ் தலைமையகத்தின் (IPD) விசாரணைக் குழு சம்பவ இடத்திற்குச் சென்றது. அந்தக் குழு, சுற்றியணைக்கப்பட்ட நிலையில், உயிருடன், முழுமையான உறுப்புகளுடன், வெளிப்புற காயங்கள் எதுவுமின்றி அந்தக் குழந்தையைக் கண்டுபிடித்தது.

"அந்தக் குழந்தை தற்போது, மேலதிக சிகிச்சைக்காக, கிள்ளான் மருத்துவமனையில்  உள்ள குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு வார்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

குழந்தையின் அடையாளத்தைக் கண்டறிவதற்கும், ஈடுபட்டுள்ள தரப்பினரைக் கண்டுபிடிப்பதற்கும், போலிஸார் தற்போது விரிவான விசாரணையை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

"அதன்படி, எந்தவொரு தகவல் உள்ளவர்களும், 03-32912222 என்ற எண்ணில் கிள்ளான் உத்தாரா காவல் நிலையத்தைத் தொடர்புகொள்வதன் மூலமாகவோ, அல்லது விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் முஹம்மத் கைரோலாஸுவான் முஹம்மத் சுபியானை 011-16937331 என்ற எண்ணில் தொடர்புகொள்வதன் மூலமாகவோ, விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

"தண்டனைச் சட்டத்தின் பிரிவு 317-ன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது" என்று அவர் கூறினார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset