நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

“ஆண்டு இறுதிவரை நாட்டில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படாது”: டத்தோ ஸ்ரீ முஹம்மத் சாபு

ஸ்ரீ அமான்: 

நாட்டில் அரிசி இருப்பு போதுமான அளவில் சீராக உள்ளதால், பொதுமக்கள் தங்களின் மாதாந்திரத் தேவைக்கு அதிகமாக அரிசியை வாங்கிப் பதுக்க வேண்டாம் என்று விவசாய, உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹம்மத் சாபு அறிவுறுத்தியுள்ளார். 

மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழலால் அரிசித் தட்டுப்பாடு ஏற்படும் என்று அஞ்சி, பொதுமக்கள் பதற்றமடைந்து பொருட்களைக் குவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இத்தகைய தேவையற்ற அச்சம் சந்தையில் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்குவதுடன், விலையேற்றத்திற்கும் வழிவகுக்கும் என்று அவர் எச்சரித்தார்.

வழக்கமாக ஒரு மாதத்திற்கு இரண்டு மூட்டை அரிசி தேவைப்படும் குடும்பங்கள், அதே அளவிலேயே அரிசியைத் தொடர்ந்து வாங்க வேண்டும் என்றும், நான்கு அல்லது ஐந்து மூட்டைகளாக வாங்கிச் சேமிக்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார். 

அரிசி விநியோகத்தில் எவ்விதச் சிக்கலும் இல்லை என்பதை உறுதிப்படுத்திய அவர், நாட்டின் அரிசி இருப்பு குறைந்தது இந்த ஆண்டு இறுதி வரை தாராளமாக இருக்கும் என்று அரசாங்கம் உறுதியளிப்பதாகத் தெரிவித்தார். ஸ்ரீ அமானில் நடைபெற்ற நெல் வயல் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போதைய விலையிலேயே அரிசி விநியோகம் தடையின்றித் தொடரும் என்பதால், பொதுமக்கள் வதந்திகளை நம்பிப் பதற்றமடையத் தேவையில்லை என்று அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார். 

சந்தையில் அரிசி விநியோகச் சங்கிலி முறையாகப் பராமரிக்கப்பட்டு வருவதாகவும், தேவையற்ற மிகை கொள்முதலைத் தவிர்ப்பதன் மூலம் விலையைச் சீராக வைத்திருக்கப் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset