நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுங்கை சிப்புட்டில் எஸ்பிஎம் தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்

சுங்கை சிப்புட்:

சுங்கை சிப்புட்டில் எஸ்பிஎம் தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற இந்திய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்

சுங்கை சிப்புட் இந்தியர் இயக்கம், ஸ்ரீ தாமான் மஇகா கிளை இணை ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதில்  11ஏ, 1பி பெற்ற ஹாரித்தா கணேசன், 11ஏ பெற்ற கீர்த்தினி ரவீந்திரன், 11ஏ பெற்ற சகீதா சிவநேசஸ்வரன் பிள்ளை, 11ஏ பெற்ற தேவஸ்ரீ சத்தியசீலன்,10ஏ பெற்ற  லோவியா , 9ஏ பெற்ற மாணவிகளான  ஜனணி ரெட்டி, ஜஸ்மிந்தா, ரஜீவ் சிங், 9ஏ,1பி , 1 சி பெற்ற கே. நித்தியா, 8ஏ, 1 பி பெற்ற என். தட்சனா, மனிஷா, 8ஏ, 2பி, 1சி பெற்ற பி.  ஹாரினி, 7ஏ, 3பி பெற்ற நஷாந்தினி, 7ஏ, 2பி பெற்ற பி. சரண்யா ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

சுங்கை சிப்புட் தொகுதி காங்கிரஸ் தலைவர் வீ. சின்னராசு தலைமையில் நடைபெற்றது.

இதில். வர்த்தக பிரமுகர் டத்தோ பூவன் சிறப்பு வருகை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் பேசிய  டத்தோ பூவன் , நாட்டில் இந்திய சமுதாயத்தின் பிள்ளைகள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கு வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது என்று புகழாரம் சூட்டினார்.

இந்த வளர்ச்சி எதிர்காலத்தில் இந்தியர் கள் சிறந்த நிலையை அடைய வாய்ப்பினை ஏற்படுத்தும் என்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset