நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

UiTM-மாணவர்கள் இருந்த இடத்திற்கு அருகே துப்பாக்கிச் சூடு

மாச்சாங்: 

நேற்றிரவு இங்குள்ள லேபோ பெர்சியாரான் UiTM-இல் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம், உள்ளூர் மக்களையும் பல்கலைக்கழக மாணவர்களையும் அதிர்ச்சியடையச் செய்தது. பலர் இது ஒரு பொது இடத்தில் நடந்ததால், பதற்றமான ஒரு தருணம் என்று விவரித்தனர்.

இரவு 11 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவம், பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. அவர்களில் சிலர், இன்னும் முடிவுறாத ஹரி ராயா கொண்டாட்டங்கள் காரணமாக, துப்பாக்கிச் சூடு சத்தத்தை முதலில் பட்டாசுகள் என்று நினைத்தனர்.

உணவக உரிமையாளர் ஷாஹிதா ரம்லி (27), தான் வேலை செய்து கொண்டிருந்த போது, திடீரென தனது வளாகத்திற்கு வெளியே சூழல் பரபரப்பானது என்றார்.

"மக்கள் ஓடுவதை நான் பார்த்தேன், பின்னர் மூன்று துப்பாக்கிச் சூடுகளைக் கேட்டேன். நான் அதிர்ச்சியடைந்தேன்.

"அது போலிஸாரை உள்ளடக்கியது என்பதை நான் உணர்ந்தபோது, உடனடியாக கடைக்குள் ஓடினேன். எனது வாடிக்கையாளர்களும் சிதறி ஓடினர்" என்று அவர் சந்தித்தபோது கூறினார்.

நான்கு ஆண்டுகளாக , 10 ஊழியர்களுடன் கடை நடத்தி வரும் அவர், அந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியதாகக் தெரிவித்தார்.

"இது ஒரு பொது இடம், இங்கு பல மாணவர்கள் உள்ளனர். இது ஆபத்தானது, ஆனால் அதிர்ஷ்டவசமாக போலிஸார் விரைவாக நடவடிக்கை எடுத்தனர்" என்றார் அவர்.

சந்தேக நபர், சாலையின் மறுபுறத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலுள்ள ஒரு வாய்க்காலை நோக்கி தப்பிச் செல்வதைத் தான் பார்த்ததாகவும், சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்ததாகவும் அவர் கூறினார்.

அடாம் ஹகிமி ரோஸ்லி எனும் மாணவர் (21), ஒரு பெரிய சத்தம் கேட்டபோது, தன்னுடன் ஆறு நண்பர்களுடன் அருகிலுள்ள ஒரு உணவுக் கடையில் இருந்ததாகத் தெரிவித்தார்.

"முதலில், மக்கள் பட்டாசுகள் அல்லது வெடிகுண்டுகளை விளையாடுவதாக நாங்கள் நினைத்தோம். ஆனால் அது அவ்வாறு இருக்கவில்லை.

"வாய்க்காலை நோக்கி சந்தேக நபரைப் போலிஸார் துரத்துவதை நாங்கள் பார்த்தோம், நாங்கள் உடனடியாக பாதுகாப்பிற்காக கடைக்குள் ஓடினோம்" என்றார் அவர்.

10 க்கும் மேற்பட்ட குற்றப் பதிவுகளைக் கொண்ட ஒரு ஆண், நேற்றிரவு இங்குள்ள மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (UiTM) முன்புறம், ஒரு அதிகாரியைப் பாரங்கால் தாக்க முயன்றதைத் தொடர்ந்து, போலிஸாரால் சுடப்பட்டதாக இன்றைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

30 வயதைக் கடந்த சந்தேக நபர், வலது தொடையில் காயமடைந்துள்ளார், மேலும் அவர் தற்போது மாச்சாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset