செய்திகள் மலேசியா
நான்தான் மாமன்னரின் குரு: சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய பெண் மீது வழக்கு
ஜொகூர் பாரு:
மலேசியா, புரூணையில் உள்ள சுல்தான்களை அவமதித்து தகாத தகவல்களை அனுப்பியதாகவும், தான் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரின் ஆசிரியை என்று கூறியதாகவும், தனித்து வாழும் தாய் ஒருவர் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
49 வயதுடைய நூருல் ஹுதா முஹம்மத் பஜூரி, நீதிபதி முஹம்மத் அஸ்ஹார் ஒத்மான் முன்னிலையில் இரண்டு குற்றச்சாட்டுகளும் வாசிக்கப்பட்ட பின்னர், அவர் தான் குற்றமற்றவர் என மறுத்தார்.
முதல் குற்றச்சாட்டில், 'ரத்துநூருருதிராது பால்கிஸ்' என்ற டிக் டாக்கில், 'நான் மலேசியாவின் 17வது நாட்டுத் தலைவரான சுல்தான் இப்ராஹிம் இப்னி சுல்தான் மஹ்மூத் இஸ்கந்தர், மலேசியாவைச் சேர்ந்த பிற சுல்தான்களின் ஆசிரியரான நபர்' என்று, மற்றவர்களைத் தொந்தரவு செய்யும் நோக்கத்துடன், குற்றஞ்சாட்டப்பட்டவர் அறிந்தே தகாத தகவல்களை உருவாக்கி அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இரண்டாவது குற்றச்சாட்டில், 'ரத்துநூருருதிராதுபால்கிஸ்' என்ற இன்ஸ்டாகிராம் சமூக வலைப்பக்கத்தில், குற்றஞ்சாட்டப்பட்டவர் அறிந்தே தகாத தகவல்களை பொய்யாக உருவாக்கி அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
1998 ஆம் ஆண்டின் தகவல் தொடர்பு, பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 233(1)(a) கீழ் இந்தக் குற்றச்சாட்டுகள் விசாரணை செய்யப்பட்டுள்ளன. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் RM500,000 அபராதம், அல்லது அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை, அல்லது இரண்டும் விதிக்கப்படும். மேலும், தண்டனைக்குப் பிறகும் குற்றம் தொடர்ந்தால், அந்தக் குற்றம் தொடரும் ஒவ்வொரு நாளுக்கும் RM5,000 கூடுதல் அபராதமும் விதிக்கப்படலாம்.
வழக்குத் தொடர்பு முஹம்மத் அஃப்தால்லான் சியாஃபிக் அஸ்மியால் நிர்வகிக்கப்பட்டது. அவர், இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் RM15,000 ஜாமீனுடன் இரண்டு உள்ளூர் உத்தரவாததாரர்களைக் கோரினார்.
குற்றஞ்சாட்டப்பட்டவரைப் பிரதிநிதித்துவப்படுத்திய வழக்கறிஞர் நூருல் ஹிதாயா முஹம்மத் அஸ்ரி, குற்றஞ்சாட்டப்பட்டவர் ஒரு விதவை, அவர் 16 வயதுடைய ஒரு குழந்தையைப் பராமரித்து வருகிறார், மேலும், அவர் RM3,000 வருமானத்துடன் ஆலோசகராகப் பணிபுரிவதாக கூறி குறைந்த ஜாமீனை விதிக்குமாறு மனு செய்தார்.
அதன்பின், முஹம்மத் அஸ்ஹார், இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் RM8,000 ஜாமீனில், ஒரு உள்ளூர் உத்தரவாததாரருடன் நூருல் ஹுதாவை விடுவிப்பதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.
அவரிடம் கடவுச்சீட்டு இருந்தால் அதை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் வழக்கு முடியும் வரை, ஒவ்வொரு மாதமும் அருகிலுள்ள போலிஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும், மேலும் வழக்குத் தொடர்பு தரப்பு சாட்சிகளைத் தொந்தரவு செய்யக்கூடாது என்ற கூடுதல் நிபந்தனைகளையும் விதித்தார். மேலும், வழக்கறிஞரை நியமிப்பதற்கும் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கும் மே 8 ஆம் தேதியையும் அவர் நிர்ணயித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை, டிக் டாக்கில் பகிரப்பட்ட உள்ளடக்கத்தில், இஸ்லாம் மதம், ஜொகூர் அரச குடும்பம், ஜொகூர் போலிஸ் தலைவர், பிரதமர் ஆகியோருக்கு எதிரான தூண்டுதல், அவதூறு, அவமதிப்பு கூறுகள் இருப்பதாகக் கூறப்பட்ட விசாரணைக்கு உதவும் வகையில், 17 வயது இளைஞர் உட்பட மூன்று நபர்கள் இங்குள்ள தாமான் சவுஜானாவில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
ஜொகூர் இஸ்லாமிய மத விவகாரங்கள் குழு உறுப்பினர் முஹம்மத் ஃபரேட் முஹம்மத் காலிட், அந்தப் பெண்ணின் ஒப்புதல், வேறு சில கூற்றுகள் வைரலான பல வீடியோ கிளிப்புகள் மூலம் செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
அவதூறான அந்த வீடியோ கிளிப்புகளில், தவறான போதனைகள் இருப்பதாக அவர் கூறினார்.
@ratunurputriratubalqis என்ற , டிக் டாக் தளத்தில் அந்தப் பெண் இஸ்லாத்தின் போதனைகளுக்கு முரணான கூறுகளைக் கொண்ட பல அறிக்கைகளை வெளியிடும் பல வீடியோக்களைக் காண்பிக்கப்பட்டது.
அந்த வீடியோக்களில் ஒன்று, அந்தப் பெண் குர்ஆனைத் தூக்கிப் பிடித்தவாறு, தான் ஆதம், ஹவ்வாவின் மகள் என்று கூறியதாகவும், அவள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 7, 2026, 5:56 pm
தகவல் தொழில்நுட்ப உபகரண விநியோகத்தில் ஊழல்: அரசு பெண் அதிகாரி கைது
April 7, 2026, 5:47 pm
மகிழ்ச்சியில் திளைக்கும் மலேசிய நகரங்கள் எவை தெரியுமா?
April 7, 2026, 5:28 pm
ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க மலேசியாவின் மேலும் ஆறு கப்பல்களுக்கு அனுமதி: ஈரான் தூதர்
April 7, 2026, 5:14 pm
மலேசியாவில் ஜூன் வரை தடையின்றி எரிசக்தி கிடைக்கும்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் உறுதி
April 7, 2026, 4:17 pm
அசாம் பாக்கி உரையில் பரபரப்பு: பதாகைகளுடன் மேடையை நோக்கிப் பாய்ந்த இளைஞர்கள்
April 7, 2026, 3:53 pm
ஐந்து வாகன விபத்தில் இருவர் காயமடைந்தனர்
April 7, 2026, 3:31 pm
