நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசு மருத்துவமனைகளின் மருத்துவர்களின் பற்றாக்குறைக்கு தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரிப்பும் முக்கிய காரணம்: காந்தீபன்

பிரிக்பீல்ட்ஸ்:

அரசு மருத்துவமனைகளின் மருத்துவர்களின் பற்றாக்குறைக்கு
தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரிப்பும் முக்கிய காரணம்.

பிஎஸ்என் கட்சியின் நிர்வாக உறுப்பினர் காந்தீபன் இதனை கூறினார்.

உலக சுகாதார தினம் இன்று அனுசரிகப்படுகிறது.
இன்றைய தினத்தில் மலேசியாவின் பொது சுகாதார அமைப்பை பற்றி பேசும் கடப்பட்டை பிஎஸ்எம் கட்சி கொண்டுள்ளது.

குறிப்பாக மலேசியாவின் பொது சுகாதார அமைப்பு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

காரணம் இன்றும் மக்கள் பொது மருத்துவமனைக்கு சென்றால் மக்கள் நீண்ட தூரம் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

மேலும் 75 சதவீத நோயாளிகள் கொண்டு மருத்துவமனையில் 25 சதவீதம் மட்டுமே மருத்துவர்கள் உள்ளனர்.

அதுவும் நிபுணத்துவ மருத்துவர்களின் எண்ணிக்கை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

இதற்கு காரணம் நிபுணத்துவ மருத்துவர்கள் அனைவரும் தற்போது தனியார் மருத்துவமனைகளை நோக்கி சென்று விடுகின்றனர்.

ஆக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு புதியதாக தனியார் மருத்துவமனைகள் கட்டுவதை அரசு நிறுத்த வேண்டும்.

அதே வேளையில் அரசு மருத்துவமனைகளின் தரத்தையும் அரசு மேம்படுத்த வேண்டும்.

இதன் அடிப்படையில் 4 கோரிக்கை அடங்கிய மனுவை மக்களிடம் கையெழுத்து வேட்டையை நடத்தவுள்ளது.

அப்பாரங்கள் பிரதமரிடம் ஒப்படைக்கப்படும் என்று காந்தீபன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset