செய்திகள் மலேசியா
லஞ்சப் புகாரில் 4 போலிசார் கைது
கோத்தா பாரு:
கடந்த ஆண்டு RM12,000 தொடர்பான ஊழல் வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில், நான்கு போலிஸ் அதிகாரிகள் இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் ஐந்து நாட்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.
ஏப்ரல் 11 ஆம் தேதியுடன் முடிவடையும் அவர்க்ளின் தடுப்பு காவல் உத்தரவை மாஜிஸ்திரேட் ராயிஸ் இம்ரான் ஹமிட் பிறப்பித்தார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 117-ன் கீழ் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்.பி.ஆர்.எம்.) தடுப்பு காவலுக்கு விண்ணப்பித்தது.
22 முதல் 42 வயதுக்குட்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் இரண்டு லான்ஸ் கோப்ரல்கள், ஒரு கோப்ரல், ஒரு சார்ஜென்ட் ஆவர்.
அவர்கள் நேற்று மாலை முறையே தங்களின் அலுவலகங்களில் எஸ்.பி.ஆர்.எம்.- ஆல் கைது செய்யப்பட்டனர்.
தானா மேரா மாவட்ட போலிஸ் தலைமையகத்தில் பணிபுரியும் இந்த நான்கு அதிகாரிகளும், ஒரு ஆணின் வாகனத்தில் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக அந்தப் பணத்தைப் பெற்றதாக நம்பப்படுகிறது.
அந்த உள்ளூர் ஆண் கடந்த ஆண்டு இறுதியில் கைது செய்யப்பட்டார்.
இதற்கு முன்னர், எஸ்.பி.ஆர்.எம்.-இன் ஆரஞ்சு நிற ரிமாண்ட் உடைகளை அணிந்திருந்த அனைத்து சந்தேக நபர்களும், காலை 8.40 மணியளவில் ஒரு வேனில் நீதிமன்ற வளாகத்திற்கு வந்தனர்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 7, 2026, 5:14 pm
மலேசியாவில் ஜூன் வரை தடையின்றி எரிசக்தி கிடைக்கும்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் உறுதி
April 7, 2026, 4:41 pm
நான்தான் மாமன்னரின் குரு: சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய பெண் மீது வழக்கு
April 7, 2026, 4:17 pm
அசாம் பாக்கி உரையில் பரபரப்பு: பதாகைகளுடன் மேடையை நோக்கிப் பாய்ந்த இளைஞர்கள்
April 7, 2026, 3:53 pm
ஐந்து வாகன விபத்தில் இருவர் காயமடைந்தனர்
April 7, 2026, 3:31 pm
காதலியின் மகளைச் சீரழித்த சமையல்காரர்
April 7, 2026, 3:23 pm
உலகளாவிய எரிசக்தி நெருக்கடி குறித்து மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்: அந்தோனி லோக்
April 7, 2026, 2:51 pm
மௌனம் என்பது அநீதிக்குத் துணை போவதே: ஈரான் தூதரகத்தின் அதிரடி அறிக்கை
April 7, 2026, 1:14 pm
